Monday 25 June 2012

கதை போல ஒன்று - 19


கதை போல ஒன்று - 19

பொதுவாக ’சூப்பர்’ கோவமானவர். ’சூப்பர்’ கொடுக்கும் தண்டனை வித்தியாசமானது.

ஒரு பையன் தப்பு செய்திருந்தால் அவனை மட்டும் அடிப்பதில்லை. அடுத்த பையன் மேலும் எதாவது தப்பை கற்பிப்பார்.

“ஏம்ல நோட்டுக்கு அட்ட போடல, ஏம்ல அப்பன மொறைக்கியா “ என்று சொல்லி இருவரையும் குற்றவாளியாக்கி விடுவார்.

சாக்பீஸை எடுத்து வந்து வட்டம் போடுவார். தப்பு செய்த இரண்டு பேரும் வட்டத்துக்குள் போய்விட வேண்டும்.

புளியங்கம்பால் அடிப்பார்.வட்டத்தை விட்டு வலி தாங்காமல் ஓடினால் “நீ எனக்கு பொறந்தவனால. கள்ள பொறப்புல. உங்கம்மா கள்ள மாப்பிள பிடிச்சிதானல உன்ன பெத்திருப்பா" என்று அடிப்பார். அவர் சொற்களின் வலியை தாங்க முடியாமல் , புளியங்கொம்பின் வலியைதாங்கும் கலையை கற்றிருந்தனர் குடுமபத்தினர்.

 சூப்பர் எப்போ என்ன பண்ணுவார்ன்னு யாருக்கும் தெரியாது.

சுதந்திர தினம் பக்கத்தில் சீட்டு பணம் முவாயிரம் ரூபாயை கொத்தா பிடித்து, கொடி வாங்கி , சவுக்கு கம்பம் வாங்கி , ஸ்பீக்கர் செட் போட்டு, மிட்டாய் வாங்கி, சத்தமாக “தாயின் மணிக்கொடி பாரீர். அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீன்னு “ பாட்டு போட்டார்.

அந்த ஏரியாவுக்கே ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்.

வழக்கமாக குடிக்கும் அவர், அன்று குடிக்காமல் கொடி கம்பம் அருகே இருந்து நாட்டை பற்றி கவலைப்பட்டு கலக்கினார்.

கவர்மெண்டு ஃபண்டுல கட்டின கக்குஸ்க்கு போயிட்டு தண்ணி சரியா ஊத்த மாட்டார். இளைய மகந்தான் ஊத்தனும்.முடியாதுன்னா அடிப்பார். வட்டம் போட்டு அடிப்பார்.

பொண்டாட்டிய பாத்து” எவனுக்கு இவன பெத்த என்றடிப்பார்.

அவர் அடியை தாங்க முடியாமல் பொண்டாட்டி “ பொம்பளய அடிக்கிற நீ ஒரு ஆம்பிளயால. தொட்டி பயல “என்று காலையில திட்ட அமைதியாக போனவர், சாயங்கலாம்  கோணத்துல மாம்பட்டை அடித்து வந்தார்.

வேஸ்டிய மடிச்சி கட்டி வீட்டு முன்னால கத்துனார்.”எந்த தே... டியால ! என்ன ’ஆம்பிளயான்னு கேட்டது. வா! வெளிய வா காட்டுறேன்.

இப்போ தெரு கூடியது.

சூப்பர் பொண்டாட்டியும் இளைய மகனும் வெளியே வந்து கெஞ்சினர். “யப்பா உள்ள வாப்பா. ஊர் பரிகாசம பண்ணும்பா”.

சூப்பர் மசியவில்லை. “ சீ நாய. படிக்கிறேன்னு திமிரோ. அவன் எங்க மூத்தவன். என் ரத்தும்ன்னா வெளிய வராம இருப்பானா ? தே... மவன வாடா வெளிய. உன் அம்ம என பாத்து ஆம்பிள்யான்னு சொல்லிட்டா. அதான் காட்ட வந்தேன்ன்னு அண்டிராயர கழற்றி வீசினார்.

பாரு! நல்லா பாரு பிள்ள. நான் ஆம்பிளதான் என்று வேஸ்டியை தூக்க போகும் வேளையில் , ஊரெல்லாம் சூப்பர் செய்யும் வேலையை ஒரு குரூர ஆர்வத்துடன் பார்த்து இருக்கும் வேளையில்., குடிசை உள்ளிருந்த்து சூப்பரின் மூத்த மகன் ஆவசமாக வெளியே வந்தான்.

முகத்தில் வெறியின் ஆவேசம்.

கையில் சைக்கிள் டயரின் கால்வாசி துண்டு. ஒன்றுமே பேசவில்லை “பளிச் பளிசுன்னு” அடிக்க ஆரம்பித்தான்.

சூப்பர் இதை எதிர்பார்க்கவில்லை.

 “ ஐய்யய்யோ என்ன அடிச்சு கொல்லுதானே. நான் பெத்த பிள்ளையே இப்படி என்ன அடிக்குதே. தவமா தவமிருந்து ஒவுரி சாமிக்கு நேந்துல்லா இவன பெத்தேன். என் ரத்தமெல்லாம் போவுவே.” என்று கதறினார்.

 யாருமே பையனை தடுக்க வில்லை.

வலிதாங்க முடியாமல் வீட்டை சுத்தி சுத்தி ஒடினார்.

மறுநாள் முதல் சூப்பர் சத்தம் கேட்கவே கேட்காது.

சூப்பர் திருந்தி விட்டார் அல்லது அடங்கிவிட்டார் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

 ஆறு மாதம் கழித்து “ எட்டி யாருடி வெளிய வாடி  “தேவி... யா”. வீட்ட வித்து ருவாய கொடுத்தா, சொந்தமா காண்டிராக்டு நடந்தி பெரிய ஆள ஆவேம்ல்லா.ஒரு தள்ள (அம்மா) க்கு இவளோ ஆங்காரம் இருக்க கூடாதுடி ‘ என்று கத்தினது சூப்பரின் முதல் பையந்தான்.

 தெருவுக்கு உற்சாகம் பொங்கி வட்டமாய் கூடி நின்றது.

No comments:

Post a Comment