Tuesday 26 June 2012

போலீஸ் துப்பாக்கி சுடுமா ?

தம்பி சொன்ன கதை இது.

பயலுகள் ஃபைனல் இயர் பிராஜக்டுக்காக வடபழனி பக்கம் சுத்தி திரிந்திருக்கிரான்கள்.

அங்கே போலீஸ் ஸ்டேசன் முன்னால் இருந்த போலீஸ்காரரிடம்.(போலீஸ் ஸ்டேசன் முன்னால் போலீஸ்தானேப்பா நிப்பார். நல்லா போடுறிய ஸ்டேட்டஸ்) பேசி பழகி இருக்கிறான்கள்.

அவரும் நல்லா பேசி, தன் அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு, வாங்கின நகை டிசைன் முதற்கொண்டு பேசி இருக்கிறார்.

இப்போது தம்பியின் நண்பன் போலீஸ்காரரிடம் காமெடியா ஒரு கேள்வி கேட்க, அவர் முகம் சிவந்திருக்கிறார்.

எல்லோரையும் கத்தி “வாங்கடா ஸ்டேசுனுக்கு” ன்னு கூப்பிட்டு பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார்.

அப்புறம் இன்ஸ்பெக்டர் வர போலீஸ்காரர் விசயத்தை சொல்ல , இன்ஸ்பெக்டரின் சிவந்த விழிகள் மேலும் சிவக்க பயலுகள் அழ ஆரம்பிக்க, ஒரு மணி நேர மிரட்டலுக்கப்பால் குதிகால் பின்னால் அடிக்க ஓடிவந்திருக்கிறான்கள்.

அப்படி என்னல கேட்டீங்க என்றேன் தம்பியிடம்.

“அது ஒண்ணுல்ல விஜய், நம்ம பால்ராஜ் இல்ல. அந்த நாயிதான் கேட்டது, போலீஸ்காரர்ட்ட “சார். எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு, உங்க கையில வைச்சிருக்க துப்பாக்கி உண்மையில சுடுமா ? இல்ல சும்மா ஸீனுக்கு வைச்சிருக்கீங்களா” ன்னு கேட்டுட்டான் . :)

No comments:

Post a Comment