Tuesday 26 June 2012

படித்த நாட்டுபுறக்கதை

எப்போதோ படித்த நாட்டுப்புற கதை ....

புருசன் பெண்ஜாதிக்கு பலவருசம் குழந்தேயே இல்லையாம்.கவலைன்னா கவலை அப்படி ஒரு கவலையாம் அவியளுக்கு.

அப்போ அந்த பொண்ணு அம்மி அரைக்கும் போது ஒரு “குறுமிளகு” மட்டும் “என்னைய உன் பிள்ளையா வளத்து போடுன்னு கெஞ்சிச்சாம்” புருசன் பொண்டாட்டிக்கு சந்தோசம்.

மிளகு பிள்ளைய பாலும் பழமுப் ஊட்டி வளத்தாவாளாம்.மிளகுக்கு கல்யாண வயசு வந்ததும் “கருத்தாயின்னு ஒரு பொண்ண கட்டி வைச்சாவாளாம்.
மிளகும் கருத்தாயியும் நிதம் முத்தமா கொடுத்து கொஞ்சிகிட்டாவாளாம்.

ஒரு நாளு கருத்தாயி சந்தைக்கு போயி காய்கறி வாங்கி வெட்டி கிட்டே இருக்கும் போது ஒரு “செவத்த தக்காளி” உருண்டு ஒடிச்சாம். கருத்தாயிக்கு ஆச்சர்யம்ன்னா ஆச்சர்யம். எடுத்து வெட்ட போகும் போது ““செவத்த தக்காளி” பேசிச்சாம். அக்கா அக்கா வெட்டாத!ஏத்துக்க ஏத்துக்க தங்கச்சியா ! என்று கெஞ்சி கதறிச்சாம்.

கருத்தாயிக்கு பாசம் வந்து “செவத்த தக்காளிய” தங்கச்சியா பாசமா வைச்சுகிட்டாம்.
நம்ம மிளகு பயலுக்கு இப்படி ஒரு செவத்த கொழுந்தியா கிடைச்சதுக்கு ஒரே கொண்டாட்டம்.

ஒருநாள் “செவத்த தக்காளி” சொல்லிச்சாம் ”அக்கா இன்னைக்கு அத்தானுக்கு நான் கஞ்சி எடுத்து போவுதேன்னு”ச்சாம்”.

மிளகுக்கு “செவத்த தக்காளி” கொழுந்தியா வயலுக்கு தனியா கஞ்சி கொண்டு வந்ததுல சந்தோசம். சுத்தி யாருமில்ல. காதல் பொங்குது கொழுந்தியா மேல.

கையா பிடிச்சி அணைச்சுக்க போக “செவத்த தக்காளி” பயந்து “மிளகு” அத்தானிடமிருந்து ஒடி வீட்டுக்கு வந்து “கருத்தாயி” மார்ல் சாய்ஞ்சி ”ஒ” ன்னு ஒரே அழுகை. கருத்தாயி காரணம் கேட்க சொல்லாம அழுவுறா.

கருத்தாயிக்கு பாவமா இருக்கு. “செவத்த தக்காளி” தங்கச்சிய கொஞ்சம் அழுத்தி பிடிச்சாளா , “செவத்த தக்காளி” நசுங்கி வெடிச்சிட்டா.தோலு மெல்லிசுதான.

இதோ சாகப்போறா ! கருத்தாயி அழுவுறா. நானே உன்ன கொன்னட்டனே பாவிங்கிறா !

அதுக்கு “செவத்த தக்காளி”

இல்லக்கா! உன் அன்பால சாகலன்னா !
அத்தான் வம்பால செத்திருப்பேன் !

அப்படி சொல்லி செத்துட்டா....

No comments:

Post a Comment