Tuesday 26 June 2012

அலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்

நான்காம் நூற்றாண்டில், அலெக்ஸாண்டர் உலகையே வெற்றி கொண்டு , இந்தியாவையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜைன துறவிகள் அவரை கவனிக்காவதராய் கடந்து செல்ல எரிச்சலைடைந்து கேட்கிறார்.

”உலகின் சக்கரவர்த்தியான என்னை , நீங்கள் முழுமையாக மரியாதை செய்யவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது ,துறவிகளே ! “

அதற்கு துறவிகள் சொன்ன பதில்.

”அலெக்ஸாண்டர்! நாம் நிற்கிறோமே , அந்த அளவு நிலத்தைதான் எல்லா மனிதர்களும் சொந்தம் கொண்டாட முடியும்.

எங்களை போன்ற சாதரண மனிதனான ’நீ’ எப்போதும் சுறுசுறுபானவனாய்!
ஆனால் எவர்க்கும் நல்லவனாய் இல்லை.

உன் வீட்டிலிருந்து பல மையில் தூரம் வந்து உனக்கும் மற்றவர்களுக்கும் தேவையற்ற தொந்தரவாய் இருக்கின்றாய்!விரைவில் நீ மரணிக்கும் போது, உன்னை புதைக்க எவ்வளவு நிலம் தேவையோ அது மட்டுமே உன்னுடையது”

என்று ஜைன துறவிகள் சொன்னது கேட்ட அலெக்ஸாண்டரின் முகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

சிரிப்பு பொங்கி வரும் உங்களுக்கு...

No comments:

Post a Comment