Tuesday 26 June 2012

ரசனை

சாரு வட்டத்தில் படித்ததில் பிடித்தது.... 

Senthil Kumar என்பவரின் கருத்து இது. எவ்வளவு அருமையான கருத்து... இம்பிரஸிவ்...

பிடித்தது பிடிக்கலை என்பதை விட மற்றவருடைய விருப்பு வெறுப்பு உங்களின் ரசிப்பு திறனை Influence ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு படைப்புமே தனிமனித விருப்பு வெறுப்பிற்க்கு அப்பாற்பட்டு விமர்சித்தாலே போதுமானது. 

ஜெயமோகனை படித்தால் தூக்கம் வரும்னு நினைச்சிட்டு படிச்சா அது எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் தூக்கம் வரமாதிரி தான் இருக்கும் .

உங்களுக்கு கரகாட்டகாரன் பிடித்தது ஆனால் அதை வெளியே சொன்னால் நம்மை ஒரு மாதிரி நினைத்து கொள்வார்கள் என்பதற்காக பிடிக்காத‌/ உலக சினிமாவை பிடித்தாக சொல்லாதீர்கள்.

ராணி காமிக்ஸ், ராஜேஷ்குமார்,பாலகுமாரன்,சுஜாதா,ஜெமோ,சாருன்னு ஒவ்வொரு காலகட்டத்தில் சிலர் நம்முடைய ஹீரோவாக இருப்பார்கள்.

ஆனால் அது நிரந்திரமில்லை.

நான் எப்படி ராஜேஷ்குமார் நாவலை விழுந்து விழுந்து படித்தேன் என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது .

அதற்காக இன்று யாராவது ராஜேஷ்குமாரை படித்தால் அவரை ஏளனமாக பார்க்க மாட்டேன்.

No comments:

Post a Comment