Tuesday 26 June 2012

நோக்கு கூலி தொடு கூலி...

தொழிலாளர்கள் கேரளாவில் பல வினோத சட்டங்களை வைத்திருந்தார்களாம்.

உங்கள் கடைக்கு ’ஒரு வண்டி’ சிமெண்டு மூட்டைகள் வருகிறது என்று வைத்து கொள்வோம். அதை உங்கள் ஆட்களை வைத்து இறக்கி வைக்க கூடாது. 

தொழிலாளர் சங்கத்து ஆட்களை வைத்துதான் இறக்க வேண்டும்.

இல்லையென்றால் மூட்டைகளை தொட்டு விட்டு போய்விடுவர். அதுக்கு கூலி கொடுக்க வேண்டும்.அதன் பெயர் ”தொடு கூலி”.

இன்னும் அட்வான்ஸாக சில தொழிலாளர்கள் மூட்டைகளை பார்த்து செல்வர் அதற்கு கூலி கொடுக்க வேண்டும்.அதன் பெயர் ”நோக்கு கூலி”.

அது மாதிரி “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” பரவிகிடக்கும் பூமி கேரளா.

அதை பற்றி ஒரு காமெடி கதை இங்கே ....

ஒருத்தன் நல்ல சக்கை பழமாக (பலாப்பழமாக) வாங்கி கொண்டு , திருநெல்வேலி போக வேண்டி திருவனந்தபுரம் பஸ்டாண்டில் நிற்கிறான்.

அங்கு வந்த கேரள தொழிலாளி ,விடு விடுவென கேட்காமலே,பழத்தை எடுத்து திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றி விட்டு கூலி கேட்கிறான்.

கூலி கொடுப்பா !

”ஏம்பா நான் உன்ன ஏத்தவே சொல்லலியே !”

”இங்க அப்படித்தான். நீ கூலி கொடு.”

”எவ்வளவு ?”

”8 ரூபாய் !”

”என்னது ?”

”8 ரூபாயப்பா ? சீக்கரம் கொடு.”

”ஏம்பா பழமே 5 ரூவாதான். நீ எட்டு ரூவா தூக்கு கூலி கேக்குற.அப்ப கூலியா இந்த சக்க பழத்தையே வெச்சுக்க.ஆள விடு !”

என்று சொல்லி கிளம்பினார் திருநெல்வேலிக்காரர் . :))

No comments:

Post a Comment