Tuesday 26 June 2012

சப்பாத்தியும் பசியும்

இரண்டு வருடம் முன்னர், இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு கிளம்பி, குவைத் நேரத்திற்கு அதிகாலை இரண்டு மணிக்கு போய் சேர்ந்தேன்.

கூப்பிட கம்பெனி சார்பில் “யூசுப் பாய்” வந்திருந்தார்.பசின்னா பசி செம பசி.என் செல் போனில் அப்பாவுக்கு குவைத் வந்ததை சொன்னேன். 160 ரூபாய் வந்தது. கழுதை போனா போகட்டும். பசிக்குதே. 

முழித்தேன். யூசுஃப் பாய் இலங்கை தமிழர் என்பதால், இலங்கை பற்றி கேட்டு கொண்டே வந்தேன். பசியை பற்றி சொல்லவே இல்லை.

ரூம் வந்தது. அது ஒரு வீடு மாதிரி இருந்தது. இன்னொருவர் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.நான் வந்ததும் ஒன்று பேசாமல் கட்டிலை காட்டினார்.

யூசுஃப் பாய் , Knpc plant உள்ளே போவதுக்கு கேட் பாஸோடு காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று என் “பாஸ்போர்ட்டையும்” வாங்கி போய்விட்டார்.

பசியோடு உருண்டு கொண்டே இருந்தேன். என் அறையை பகிர்ந்தவர் தன் பெயரை அறிமுக படுத்தி கொண்டு, குளித்து ஆபீஸ் செல்கிறேன் என்று போய் விட்டார்.

நான் ஜன்னல் வழியே வெளியே வெயில் தகிக்கும் குவைத்தை பார்த்து கொண்டிருக்கிறேன். பசி கொல்கிறது. என் பிள்ளை “மீரா வர்சினி” ஞாபகம் வருகிறது. கிட்டத்தட்ட அழுது விடுவேன் என்ற் நிலையில் இருந்தேன்.

கதவு தட்டபட்டது, திறந்தேன். அறை பகிர்ந்த நண்பர் நின்று கொண்டிருந்தார். கையில் ஒரு பார்சலை நீட்டினார் . “ பாஸு சாப்பிட்டிருக்க மாட்டீங்கல்ல. நான் மறந்தே போயிட்டேன். கொஞ்ச தூரம் போனப்புறம்தான் ஞாபகம் வருது. நல்லவேளை வண்டியில ஏறுர முன்னாடி ஞாபகம் வந்தது.இனிமே பத்து மணிக்கு ஒரு வேன் கிளம்பும் அதுலதான் போகனும்” என்றார்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றியில் மனம் விம்மிற்று.

பார்ஸ்லை பிரித்தேன். நான்கு சப்பாத்திகள்.

நம்பிக்கை வந்தது.

2 comments:

  1. நம்பிக்கைதானே வாழ்கை .

    ReplyDelete
  2. பசித்தவனுக்கு உணவு தான் கடவுள்

    ReplyDelete