Thursday 8 December 2016

நான்- ஸ்ருதி டிவி மற்றும் கே.என் சிவராமன்...

நண்பர் கே. என் சிவராமன் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் தன் சுவரில் என் மீது சில விஷயங்களை அபாண்டமாக எழுதியிருக்கிறார்.
கே.என் சிவராமன் !
நீங்கள் விஷயத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் ஐயா...
நான் நடந்ததை கோர்வையாக எழுதிவிடுகிறேன்.

1. 15 அக்டோபர் 2016 அன்று பிரேம் புத்தக நிகழ்வில் திருமா பேசிய வீடியோவை பகிர்ந்து, அதில் ஸ்ருதி டிவியை புகழ்ந்து போஸ்ட் போடுகிறேன்.
2.அப்படி போட்ட பிறகு கீழே உள்ள எழுத்தை தற்செயலாக பார்க்கிறேன். அதில் திருமா இந்துத்துவ சக்திகளோடு துணை போவேன். மோடி எனக்குப் பிடிக்கும் என்றெல்லாம் சொல்வதாக வாசகங்களை ஸ்ருதி எழுதியுள்ளார்.
3.அக்கூட்டத்தை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் எனக்கு கொதிப்பு வருகிறது. அதை ஸ்ருதிக்கு சுட்டிக்காட்டுகிறேன். பதிவுக்கு லைக்கிட்ட ஸ்ருதி, என் சுட்டிக்காட்டலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நான் கோபத்தில் அவரை பிளாக் செய்கிறேன்.
4. அரவிந்த் யுவராஜ் வந்து கண்ணியம் பேசுகிறார். என்ன இது இப்படி செய்து விட்டீர்களே என்று சொல்லி, நான் ஸ்ருதி டிவியிடம் பேசுகிறேன் என்கிறார். நான் அதை கண்டுகொள்ளவில்லை.
5.அக்டோபர் 18 இன்று அதாவது மூன்று நாட்கள் பிறகு, அக்காணொளியை பார்க்கிறேன். அதில் அந்த விஷ எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன. நான் மறுபடியும் கொதிக்கிறேன். மத்தியஸ்தம் என்ற போலி முகம் காட்டிய நண்பர் அரவிந்த் யுவராஜை டேக் செய்து இன்னும் அவர் எடுக்கவில்லை. அவர் செய்தது தவறு என்கிறேன்.
6. அரவிந்த் யுவராஜ், விஜய் அவர் அன்றே அதற்கு பதில் சொல்லிவிட்டார் என்கிறார். எனக்குக் குழப்பம். வேறு ஐடி மூலம் ஸ்ருதி டிவி சுவருக்கு சென்று பார்க்கிறேன்.
7.அங்கே அவர் அதே 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் அக்காணொளியில் 38 வது நிமிடம் திருமா அப்படி பேசியிருக்கிறார். அதைத்தான் எழுதியிருக்கிறேன். வேறு யாராவது அப்படியில்லை என்று சொன்னால் மாற்றிக் கொள்கிறேன் என்கிறார்.
8. நான் குழப்பத்தோடு மறுபடியும் கேட்கிறேன். அந்த 38 வது நிமிடத்தில் அதற்கு எதிராகத்தான் திருமா பேசியிருக்கிறாரே தவிர, ஸ்ருதி எழுதியிருப்பது போல் பேசவே இல்லை.
9. நான் ஆவேசமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அரவிந்த யுவராஜிடம் இவர் திருந்தவில்லை. அவரை ஆதரிக்கும் நீங்களும் ஒரு போலி என்று அரவிந்தை பிளாக் செய்கிறேன்.
10. தோழர் கிருபா முனுசாமி களத்தில் வருகிறார். அவர் ஸ்ருதி டிவி சொல்வது போல 38 வது நிமிடம் அப்படி எதுவுமில்லை. திருமா அப்படி பேசவில்லை என்று நிருபிக்கிறார்.
11. ஸ்ருதி டிவி இப்போதும் ரியாக்ட் செய்கிறது. அப்போதும் தன் தவறை ஒத்துக் கொள்வது போல செய்து, அக்காணொளியையே நீக்கி விடுகிறது. இதற்கு ஆதாரமாக வெற்றிவேல் கிருபா சுவரில் முதலி காணொளியை பார்க்க முடியவில்லை என்றொரு ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார். நானும் வேறு ஐடி மூலம் அதை ஒபன் செய்த போது செய்ய முடியவில்லை.
12. நான் மறுபடியும் காணொளியின் விவரிப்பை திருத்தச் சொன்னால், காணொளியையே நீக்கியிருக்கிறாரே என்று சொல்கிறேன்.
13. இப்போது மறுபடி ஸ்ருதி டிவி காணொளியை பதிவேற்றுகிறார். தன் நண்பர்களிடம் போய் ஆதரவு கேட்கிறார். ஸ்ருதி எனக்கும் தெரிந்தவர்தான். என்னிடமும் நன்றாக பேசுபவர்தான். அவர் தலித் விரோதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் காணொளி விஷயத்தில் அவர் செய்தது தலித் விரோதம்தான். அதை அவர் அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் சரி. நான் இன்று இப்படி நிலையாய் நிற்காவிட்டால் அவர் அதை நீக்கியிருக்கவே மாட்டார். ஒரு தவறான தகவலை மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
14. 38 வது நிமிடத்தில் அப்படியில்லை என்று ஸ்ருதி டிவிக்கு தெரியாதா. அவரால் அன்றே அதைக் கேட்டு திருத்தியிருக்க முடியும்தானே.
15 ஏன் அன்றே திருத்தவில்லை. அதுதான் என் கேள்வி. சிவராமன் அவர்களே... இரண்டு நிமிடம் அதை கேட்டு ஏன் நீங்கள் திருத்தவில்லை என்று ஸ்ருதி டிவியை கேளுங்களேன். நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஆனால் ஒரு பக்கம் மட்டும் கண்ணியம் கண்ணியம் என்று அட்வைஸ் பண்ண வந்துவிடுவீர்கள்.

பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் இது பற்றி பல கோணங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்த கண்ணியதோடயே எழுதுகிறேன் ஐயா...