Tuesday 26 June 2012

பரஞ்சோதியும் நாகநந்தி அடிகளும்

பரஞ்சோதி, காஞ்சியில் ஒரு சிறுகுற்றத்திற்காக் சிறையில் அடைபட்டிருக்கிறார்.

இரவில் சிறை அறையின் விட்டத்தை பார்த்து கவலையுற்று படுத்திருக்கிறார்.

திடீரென்று மேற்சுவரில் மெல்லிய ஒளி புள்ளி தோண்றுகிறது.

பரஞ்சோதி கூர்மையாக பார்க்கிறார்.

ஒளி புள்ளி இப்போது வட்டமாகிறுது.

நேரம் செல்ல செல்ல வட்டத்தின் விட்டம் பெரிதாகிறது.

அப்புறம் தான் தெரிகிறது யாரோ சிறை அறையின் மேல்சுவரை பிரித்து உள்ளே இறங்குகிறார் என்று.அது நாகநந்தி அடிகள்தான்.(புலிக்கேசியின் சகோதரன்)

கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் காட்சி இது (என் பாணியில் சுருங்க சொல்லி இருக்கிறேன்).

திரைப்படத்தில் வருவது போல எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள் கல்கி.

அதனால்தான் கல்கி இன்னுமும் வாழ்கிறார். சீரியஸ் இலக்கியவாதிகள் அவரை கிண்டலடித்தாலும் :)

No comments:

Post a Comment