Monday 7 March 2016

சரணடைதல் மட்டுமே

காதலர் தினம் வருகிறது.
சமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.
அதன் படி
பார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்ளங்காலை அமுக்கி விடும் போது
அவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,
அதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து
ஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.
பெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.
அதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.
இதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு வரும்.
எப்படி காலை கரும்புவது?
என்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.
ஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்
வெட்கம்,
அருவருப்பு,
'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு
சரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.
செயல்படுத்திப் பாருங்கள்

No comments:

Post a Comment