Monday 7 March 2016

செண்டிமெண்ட் ரத்தத் திலகம்..

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே' என்று ரத்த திலகம் படத்தில் வரும் பாடல் பிடிக்காத மனிதனே இருக்க முடியாது.
அந்த திரைப்படம் பிடித்த காரணத்தினால் எனக்கு அது ரொம்ப உருக்கமாய் இருக்கும்.
குமாரும் கமலாவும் கல்லூரியில் பரஸ்பரம் செல்லமாக சண்டையிட்டு கொள்ளும் நண்பர்கள்.
ஒருநாள் குமாரின் டைரியின் மூலமாக அவன் தன்னை காதலிப்பதை கமலா அறிந்து கொள்கிறாள்.
சாவித்திரியும் சிவாஜியை காதலிக்கிறார்.
ஆனால் மறுநாளே அவர் பிறந்த ஊரான சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை.
"குமார் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்ட நேரம் பிரியிர நேரமா இருக்கே" என்று கமலா நெகிழ்கிறார்.
மறுநாள் கூடிப்பிரியும் விழாவில் பாட வேண்டிய பாடல் வரிகளின் ஆரம்ப வரிகளான
'பசுமை நிறைந்த நினைவுகளே' வரியை சிவாஜி பாடுகிறார்.
'பாடித்திரிந்த பறவைகளே' என்ற வரிகளை சாவித்திரி பாடுகிறார்.
விழாவில் இருவரும் அப்பாடலை உருக்கமாக பாடுகிறார்கள்.
சாவித்திரி சீனாவுக்கு போகும் முன் சிவாஜியை பார்த்து கண்கலங்குகிறார். சிவாஜியும் அப்படியே.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கொள்கிறார்கள்.
அன்பிலே 'குமார்' என்றும் 'கமலா' என்றும் குரல் நடுங்க அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள்.
இந்த தழுவலுக்குப பிறகு அவர்கள் இருவரும் யாரையும் வாழ்கையில் தழுவ வில்லை.
சாவித்திரியும் சிவாஜியும் பிரிகிறார்கள்.
அப்போது இந்தியா சீனா போர் மூளப் போவதாக சிவாஜிக்கு தகவல் வருகிறது. இப்பக்கம் சாவித்திரி சீனன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு உளவு சொல்கிறார்.
சிவாஜி பெரிய ராணுவ அதிகாரி ஆகி பணியாற்றுகிறார். யுத்த களத்தில் சிவாஜி கைதி ஆகிறார்.
அங்கிருந்து தப்பித்து செல்லும் போது சாவித்திரி ஒரு புதரில் மயங்கி சோர்ந்து கிடப்பதை பார்க்கிறார்.
கமலா என்று அவர் மனம் ஒரு நொடி நெகிழ்கிறது. ஆனால் தேச துரோகி என்று வெடித்து சாவித்திரியை ஏசுகிறார்.
சாவித்திரி சொல்ல வருவதை கேட்கவே இல்லை. முடிவில் சாவித்திரி சொல்கிறார்
"குமார் இதயமில்லாதவர்கள் கண்கள் சொல்வதை மட்டும்தான் நம்புவார்கள். நீங்கள் இதயமுள்ளவர். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்து நான் சொல்வதை கேளுங்கள். இத்தனை நாள் உங்களுக்கு வந்த ரகசிய தகவல் அனைத்தும் நான் சொன்ன உளவுதான்."
இதைக் கேட்ட சிவாஜி சாவித்திரியை உருக்கமாக அணைக்க போகிறார். சாவித்திரி அந்த அணைப்பை ஏற்று கொள்ளவில்லை. விலகி விடுகிறார்.
இருவரும் அவரவர் நிலைமையை நினைத்து அழுகிறார்கள்.
சிவாஜி கையில் இருக்கும் ரொட்டி துண்டுகளை சாவித்திரியிடம் நீட்டுகிறார். கொடுமையான பசியில் இருக்கும் கமலா அதை வாங்கி வேகமாக தின்கிறாள்.
குமார் அது பார்த்து அழுகிறான்.
அப்போது அங்கே மாறு வேடத்தில் வரும் சீனத்து கணவன் கமலாவை சுட்டுக் கொள்கிறான். சிவாஜி திரும்ப அவனை அழிக்கிறார்.
ஒடிச் சென்று தன தோழியான, பிரிவதற்கு முந்தைய நாள் காதலை ஏற்றுக் கொண்ட, ஒரே ஒரு முறை அன்பிலும் அன்பாக அணைத்து கொண்ட சாவித்திரியை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்.
இருவர் கண்களும் இன்பத்தால் சிரிகின்றன.
அனால் இம்முறையும் இது தற்காலிகமான சந்திப்புதான் என்ற வேதனை இருவர் முகத்திலும் வருகிறது.
விசும்புகிரார்கள்.
இதற்கு முன் இருவரும் ஆனந்தமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.
ஒருவருடம் முன்னர் இப்பாடலை இருவரும் பாடிக் கொண்டிருக்கும் கல்லூரிக் காலங்களில் இப்படி ஒரு இடத்தில் மறுபடி சிந்திப்போம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.
வாழ்க்கையில் காதல் எப்படி முக்கியமோ அப்படியே கடமையும் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்படி இரு நாடுகளுக்கு இடையேயான போர் அவர்கள் காதலை நட்பை பிரிக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனாலும் என்ன? மனம் அப்படியேதானே இருக்கிறது.
"விமானம் இல்லாவிட்டாலும் சிறகுகள் துணை கொண்டாவது உங்களை பார்க்க வருவேன்" என்பாள் கமலா.
ஆம் அவர் அவள் அன்பு சிறகுகளால் எப்படியோ குமாரை பார்த்து விட்டாள் தானே.
இப்போது அவள் குண்டடி பட்டு உடல் வலியால் துடித்தாலும் மனத்தால் காதல் நிரம்ப குமார் மடியில்தானே வீழ்ந்து கிடக்கிறாள்.
குமாரும் கமலாவும் கனிவோடு பார்த்துக் கொள்கிறார்கள்.
கமலா இதோ தூங்கப் போகிறாள்.
அப்போது சிவாஜி சொல்கிறார்
"பசுமை நிறைந்த நினைவுகளே"
கமலா பதிலுக்கு
"பாடித்திரிந்த பறவைகளே" என்று சொல்லி கண்களை மூடுகிறாள்.
காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம் என்பதை குமாரும் கமலாவும் உணர்ந்து கொள்ளும் நேரம்
பார்க்கும் எனக்கும் அது புரிந்து விடுகிறது.
பிசைந்து பிழிகிறது அன்பு.

No comments:

Post a Comment