Monday 7 March 2016

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.
அன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.
முஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.
சிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.
இதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.
இதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.
ஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.
மக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.
கீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... " இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.
ஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.
கீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.
ஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.
இது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
அதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.
என் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.
எனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார்.
மாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.
பாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.
அசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.
தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.
அவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.
திரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.
இதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.
அரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,
வேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.
சர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,
தற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.
யோசிக்க வைக்கிறார்.
அன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் "நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது
அன்னம் மிரண்டு நிற்க
அங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்
"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா"
என்னும் இடம் சிலிர்பூட்டுகிறது.
இலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது
சாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.

2 comments:

  1. சு,சமுத்திரத்தின் கதைகள் சமூக அக்கறைகொண்டதாகவும் பாதிக்கப்பட்டவனின் பக்கம் நிற்பார்,

    ReplyDelete
  2. //அசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்//
    //திரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேதனர//

    ReplyDelete