Friday 7 August 2015

காசு பணம் துட்டு மணி மணி

பயணம் செய்த கப்பல் உடைய , ஏதோ ஒரு தீவில் ஒதுங்கி,
மூர்ச்சையற்று ஒதுங்கிக் கிடந்த ஒருவனை,
இன்னொருவன் காப்பாற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்று, பாடு பார்த்துக் காப்பாற்றினான்.
பலநாட்கள் உணவு கொடுத்து, உடை கொடுத்து, தங்க இருப்பிடமும் கொடுத்தான்.
அத்தீவுக்கு இன்னொரு கப்பல் வர,அதில் ஏறி காப்பாற்றியவனுக்கு நன்றி சொல்லிக் கிளம்புகிறான் இந்த ஒருவன்.
கப்பலில் ஒரு வியாபாரிக்கு இவன் நட்பு பிடித்துப் போக விலை உயர்ந்த ’வைர மோதிரத்தை’ பரிசாகக் கொடுத்தார்.
இந்த ஒருவன் வீட்டுக்குப் போனதும், மனைவி மக்கள் ஒடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு விசாரிக்க,
“இதப் பாத்தியா எனக்கு இந்த விலை உயர்ந்த வைர மோதிரத்த பரிசாக கொடுத்தார் ஒரு வியாபாரி. அவரு ரொம்ப அன்பானவரு,நல்லவரு,இரக்கமானவரு “
என்றான் அந்த ஒருவன்.
அந்த ஒருவன் வேறு யாருமல்ல நாம்தான்

No comments:

Post a Comment