Friday 7 August 2015

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா...

ஃபிரண்ட்லைன் இதழில் கோகுல்ராஜ் மரணத்தைப் பற்றியக் கட்டுரையில்,
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் இளம் தலைவர் கோபால் ரமேஷின் பேட்டி இடம் பெற்றிருக்கிறது.
//கேள்வி :
கோகுல்ராஜ் அந்தப் பெண்ணிடம் காதல் வசப்பட்டதில் தவறென்ன? அவர்கள் இருவரும் பெரியவர்கள்தானே?
கோபால் ரமேஷ் :
ஒரு தலித்தாக தன் பிறப்பு சார்ந்த எல்லையை அவர் (கோகுல்ராஜ்) தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நாங்கள் பிற சாதிகளை மதிக்கிறோம்.அதனால் அவைகளில் தலையிட மாட்டோம்.
நாமெல்லோரும் ஒற்றுமையாக வாழ லட்சுமண ரேகை ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும்.
எங்கள் சாதிப் பெண்கள் பற்றி எப்போதும் பெருமையே கொள்வோம்.
எங்கள் சாதிப் பெண்கள் எங்கள் இளவரசிகள். எங்கள் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் அவர்கள் வளர்த்து பாதுகாப்பதால் நாங்கள் அவர்களை வளர்த்து பாதுகாக்கிறோம்.
நாங்கள் அசிங்கப்படுவதை பொறுத்துக் கொள்வோம் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்? //
எவ்வளவு தைரியமாக பேசியிருக்கிறார் பாருங்கள்.
இந்தியா விடுதலை பெற்ற அன்று,
“இந்த விடுதலை குறிப்பிட்ட இன மக்களுக்கு கிடைத்த விடுதலை. இது அனைவருக்குமான விடுதலை அல்ல. அதனால் இதை துக்க நாளாக கொண்டாடுகிறேன்” என்றாராம் பெரியார்.
இது மாதிரியான ஒரு நாட்டின் கொடியை எரிப்பதை அரவிந்த்சாமி தடுப்பதை கண்ணீர்மல்க உணர்ச்சி பொங்க பார்த்த சிறுவயது காலங்களை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன்.
இந்நாடு
இந்திய நாடு
பாரத மணித் திருநாடு
கோபால் ரமேஷ்களுக்கானது,
கோகுல்ராஜ்களுக்கானது அல்ல...

No comments:

Post a Comment