Friday 7 August 2015

மாற்றமில்லாதவர்கள்.

2011 யின் இறுதியில் ஃபேஸ்புக் வந்தேன்.
ஃபேஸ்புக்கில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் சில கேள்விகள்.
- சாதி வேண்டாம்கிறாங்க ஆனா ஸ்கூல்ல மட்டும் சாதி சான்றிதழ் கொடுப்பாங்க கேட்பாங்க.
-இந்து மதத்த மட்டும் திட்டுவாங்க ஆனா மத்த மதத்த திட்ட மாட்டாங்க/ மாட்டாரு இந்த தி.க / பெரியார்.
-காந்தி ஒரு இந்துத்துவ வெறி பிடிச்ச ஆள்
- லேடீஸ் வந்து ஜெண்ட்ஸ் சீட்டுல ’இது பொது இடம்னு உட்காந்துக்கிறாங்க. ஆனா அவுங்களுக்கு மட்டும் லேடீஸ் சீட்டுன்னு இருக்கு.
-பொம்பளைங்க அப்படி இப்படி டிரஸ் பண்ணிட்டு அப்புறம் ஆம்பிள பலாத்காரம் செய்றான்னு கம்பிளைண்ட் செய்தா எப்படி ?
-இடஒதுக்கீடு தப்பு. பணக்காரன் கூட அத பயன்படுத்திகிறான்.என் தெருவுல ஒரு பையன் நல்ல மார்க்கு ஆனா இந்த இடஒதுக்கீட்டால சீட்டு கிடைக்கல.இடஒதுக்கீடுதான் சாதிய வளக்குது
-இடஒதுக்கீட்டால் திறமை குறைந்த டாக்டர்கள் பொறியாளர்கள் வெளியே வர்றாங்க
- ராமர் படத்த செருப்பால அடிச்ச பெரியார் மேல எனக்கு வர்ற கோவம் இருக்கே நற நற நற.
- நான் ஐயர்ன்னு பின்னாடி போட்டா நீ பள்ளன்னு பேருக்குப் பின்னாடி தன்னம்பிக்கையா போடேன். யார் வேண்டாம்னு சொன்னது.
- அரேபியால எல்லாம் நெத்தியில சுட்டுக் கொல்றான். நம்ம நாட்டுல பிரியாணி வாங்கிக் கொடுக்க சொல்லி, தூக்குல போடக்கூடாதுங்குறான் இந்த மனித நேயவாதிகள். இந்த மனித நேயவாதிகளே அரைகுறைகள்தான்.
- அம்பேத்கர் பெரியார் பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே காத தூரம் தெறித்து ஒடுவது.
நான்கு வருடங்களாகப் பார்க்கிறேன்.
இவர்கள் அணு அளவுக்கு கூட தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.
அப்படியே இருக்கிறார்கள்.
அப்படியே பிடித்து வைத்த சாணி மாதிரி இருக்கிறார்கள்.
மாற்றுப் பார்வை இல்லை.
மாற்றுச் சிந்தனை இல்லை.
இப்படியே இருந்து
வயதாகி
கூன் விழுந்து
பல் விழுந்து
தோல் சுருங்கி
செத்துப் போவார்களோ.

No comments:

Post a Comment