Friday 7 August 2015

அப்துல் கலாம் அஞ்சலி

சும்மா சுமமா காலனைத் திட்டிக் கொண்டிருக்காதீர்கள் ஃபிரெண்ட்ஸ்.
ஏதோ அந்தக் காலன் இருப்பதால்தான் பல வி.ஐ.பிகள் நினைவுக்கே .வருகிறார்கள்.
அப்துல் கலாம் கூட அப்படித்தான் நினைவுக்கு வருகிறார்.
கலாம் சுயக்கட்டுபாட்டை மட்டும் மதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார். மற்றபடி அவருடைய மதமாக அறிவியல்தான் இருந்திருக்க வேண்டும்.
அப்துல் கலாம் மீது உண்மையான பற்று அன்பு இருந்தால் நாமும் அறிவியலையும் பகுத்தறிவையும் மட்டுமே மதமாகக் கொள்ள வேண்டும். அதைத்தான் கலாமும் இந்திய முன்னேற்றத்துகாக நினைத்திருப்பார்.
மனிதநேயம் கலந்த அறிவியல் உணர்ச்சி மற்றும் பகுத்தறிவுவாதம்.
ஒரு பக்கம் கலாம் படத்தை கவர் போட்டோவாக வைத்து அஞ்சலி செலுத்தி இன்னொரு பக்கம் செயின் மோதிரம் மந்திர சக்தியில் கொடுக்கும் சாய்பாபாவை கும்பிட்டு நம்பிக்கைக் கொண்டு மூடநம்பிக்கையில் இருப்பது எல்லாம் முரண்பாட்டின் உச்சம். அப்துல கலாம் அதை விரும்ப மாட்டார்.
எப்படி சாய்பாபா செயின் எடுத்தார்?
எங்க இருந்து ஒரு பொருள காத்துல இருந்து எடுக்க முடியும்?
என்று அறிவியல் கேள்வி கேட்க வேண்டும். அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இதையெல்லாம் அப்துல் கலாம் வழி நின்று கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளி அறிவியல் புத்தகங்களை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக படித்துப் பார்ப்பது கூட கலாமுக்கு செலுத்தும் நல்ல அஞ்சலியாகும்.
அப்துல கலாம் சிறந்த விஞ்ஞானியாக உழைப்பாளியாக நமக்கு வழிகாட்டுவதைப் போல, எப்படி இருக்கக் கூடாது என்று சில இடங்களில் வழி காட்டுகிறார்.
எனக்கு அப்துல் கலாமைப் பார்த்தால் ” விலங்குப் பண்ணை “ நாவலில் வரும் ’பாக்ஸர்’ என்ற குதிரைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த பாக்ஸர் என்ற குதிரை விலங்குப் பண்ணையில் நடக்கும் சர்வாதிகாரம் எதையும் தட்டிக் கேட்காது என்பது கூட இல்லை,
அதை கவனத்தில் கொள்ள விரும்பாது “உழைப்பே உயர்வு தரும்” என்று உழைத்துக் கொண்டே இருக்கும்.
இதில் ”கவனத்தில் கொள்ள விரும்பாது” என்பதில் வரும் ”விரும்பாது” என்பது அப்துல் கலாமுக்கு மிகச்சரியாய் பொருந்தும்.
சுரண்டல்காரர்கள் இருக்கும் போது அதிகம் உழைப்பது எப்படித் தீர்வைத்தரும் என்றெல்லாம் பாக்ஸர் நினைக்காது. உழைப்போம் உழைத்தால் அனைத்துப் பிரச்சனையும் அகலும் என்று உழைக்கும்.
கலாம் கூட நாட்டின் பல பிரச்சனைகளை தட்டிக் கேட்க வாய்ப்பிருந்தும், தட்டிக் கேட்காமல் அறிவியல்,உழைப்பு போன்றவையே இந்தியாவை முன்னேற்றும் என்று கடைசிவரை நம்ப ஆசைப்பட்டார். குழந்தைகளிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
ஆனாலும் அப்துல் கலாமுக்குப் பிறகுதான் பொதுமக்கள் மத்தியில் Mission Vision போன்ற வார்த்தைகளும், உழைப்பு, அறிவியல் போன்றவற்றின் மீதும் நம்பிக்கை வந்திருக்கிறது என்பது கொஞ்சம் உண்மைதான்.
அதனாலேயே எனக்கு அவரைப் பிடித்தும் இருக்கிறது என்பதும் கொஞ்சம் உண்மைதான்.

No comments:

Post a Comment