Friday 7 August 2015

எக்ஸ்ரேக்காரர் பெரியார்...

மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துக்களை தன்னால் சொல்ல முடியாது என்று பெரியார் சொல்கிறார்.
ஒரு போட்டோக்காரனிடம் சென்று போட்டோ எடுத்தால், அவன் அதை நல்ல வெளிச்சத்தில் எடுத்து நல்ல விதமாக டச் அப் செய்து அழகாக்கிக் கொடுப்பான்.
நிஜ முகத்தை விட போட்டோவின் முகம் அழகாக இருப்பது மாதிரி செய்து கொடுப்பான்.
அது போல நம்மிடம் இருக்கும் பல மூடப்பழக்கங்களை அறிவின்மையை வேறு நல்ல மாதிரியாக சித்தரிப்பதை பலர் செய்கிறார்கள்.
அதை நம் கலாச்சாரமாக கொண்டாடிக் காட்டுகிறார்கள். இது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் போலியான காரியமாகும்.
ஆனால் ”நான் ஒரு ’எக்ஸ்ரே’காரன்” என்கிறார் பெரியார்.
எப்படி எக்ஸ்ரே எவ்வளவு அழகான உடலுள்ளும் சென்று அதன் பிரச்சனையை பார்க்கிறதோ, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறதோ அது போலத்தான் தானும் என்கிறார் பெரியார்.
கலாச்சாரப்பழக்கம் என்று கொண்டாடும் உருக்கவாக்கப்பட்ட அழகிய உடலுக்குள் இருக்கும் நோய்க்கூறுகளை எடுத்துக் காட்டும் எக்ஸ்ரேக்காரன் என்கிறார்.
நேரடியாக ஒரு விசயத்தைப் பார்ப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
அது பெரியாருக்கு இருந்தது.

No comments:

Post a Comment