Saturday 10 August 2013

சி.சு செல்லப்பாவும் எழுத்தும்...

இப்படியெல்லாம் தவமாய் தவமிருந்து வளர்க்கப் பட்டிருக்கிறது தற்கால தமிழலக்கியம்.

இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று தயவு செய்து இனிமேல் கேட்டு விடாமல்.அதற்கான பதிலை நாமே தேடினால் மட்டுமே அது கண்களுக்கு தெரியும்.

<<1956ல் சுதேசமித்ரனில் சி.சு.செ ‘’சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை எழுத,அதற்கு மறுப்பாக அகிலன்,ஆர்வி முதலியவர்கள் எழுதினார்கள்.இதன் விளைவாக,விமர்சனத்திற்காக ஒரு சிற்றேடு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ‘எழுத்து’ என்ற மாதப் பத்திரிக்கையை தொடங்கினார்.சில இதழ்கள் வந்த பிறகு நா.பிச்சமூர்த்தியின் வசன கவிதை அதில் வந்தது.பின்பு அதன் போக்கே மாறிவிட்டது.முதலில் விமர்சனக் குரலாக பிரகடனப் படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ புதுக்கவிதைக்கான களமாக மாறியது.அவர் கூற்றுப்படியே தற்செயலான நிகழ்ச்சிதான்.

புதுக்கவிதைக்கு இரண்டு முனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.ஒன்று தமிழ் பண்டிதர்களிடமிருந்து. இவர்கள் ‘புதுக்கவிதை’ என்ற வடிவத்தை உதாசீனப் படுத்தியதன் மூலம் தம் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் கடுமையான எதிர்ப்பை காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான்.கேலியும் கிண்டலும் செய்தார்கள்.எழுத்து பத்திரிக்கையின் தலையங்கங்களைப் படித்துப் பார்த்தால் சி.சு. செல்லப்பாவின் மகத்தான பணியை உணர்வார்கள்.

‘தமிழ் கவிதையில் கொஞ்ச நஞ்சம் இலக்கணம் இருக்கிறது.அதையும் அழிக்க வந்துவிட்டான் இந்த பார்ப்பான்’ என்று பண்டிதர்களும், ‘அமெரிக்க முதலாளித்துவத்தின் விற்பனையாளன்’ என கம்யூனிஸ்ட்டுகளும் தாக்கினர்.

விமர்சனத்திற்காகவே தொடங்கிவிட்ட இதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும் என்ற வெறியில் நாளொன்றுக்கு பதினான்கு மணி நேரம் கூட ஆங்கிலத்தில் திற்னாய்வு நூல்களை தன்னுடைய நாற்பத்தியேழாவது வயதில் சு.சு.செ படிக்கத் தொடங்கினார்.சென்னையிலுள்ள எல்லா நூலகங்களில் உள்ள ஆங்கில இலக்கிய புத்தகங்களையும் படித்தார்.தொல்காப்பியமும் நன்னூலும் படித்தார்.

எழுத்து வின் தொடக்க காலத்தில் க.நா.சு,சிட்டி,நா.சிதம்பர சுப்ரமண்யம் எழுதினார்கள்.ஆனால் நிறுத்தி விட்டார்கள்.அவர்கள் யாருமே சி.சு.செ வை அவ்வளவாக மதித்தது கிடையாது.விமர்செனத்திற்கென்றே ஒரு பத்திரிக்கையா என்று கிண்டல் செய்தனர்.’இது ஒரு அசடு ஆர்வக் கோளாறினால் ஏதோ செய்கிறது’ என்று பரிதாபப் பட்டார்கள்.

ஆனால் சி.சு.செவுக்கு ஆத்மார்த்தமாக ஒத்துழைப்பு தந்தவர் ந.பிச்சமூர்த்திதான்.சி.சு.செவின் முயற்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்று நம்பினார் அவர்.

’எழுத்து’ மிகுந்த பணத் தட்டுப்பாட்டில் இருந்தது. எழுத்து புதிய படைபாளிகளுக்கு இடம் கொடுத்தது என்பதைவிட,பிற்காலத்தில் தடம் பதித்தவர்களை அடையாளம் கண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரமிள்,வைதீஸ்வரன்ம்சி.மணி,ந.முத்துச்சாமி,வெங்கட் சாமிநாதன், சி.கனகசபாபதி இவர்களை குறிப்பிட வேண்டும்.>>

- கி.அ சச்சிதானந்தம்

No comments:

Post a Comment