Wednesday 21 August 2013

மூன்று ஜோக்குகளில் இரண்டு ஏ ஜோக்குகள்...


பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி சில்வர் ஜூப்ளி விழா மலரில் ( 1982 இல வந்தது) படித்தது இந்த ஜோக்குகள்... :)

1.வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.
முதல் பிராயாணம் விமானத்துல. அதனால பயம் பதட்டம்.

ஏறின உடன சீட் பெல்ட்ட போட்டுகிட்டார்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்து பிரமிச்சுட்டார்.
க்ஷாக்காகி கத்தினாராம்.

ஹேய் அங்கப்பாரு!எல்லா மனுசங்களும் குட்டி குட்டியா எறும்பு மாதிரி தெரியிறாங்க.

உடனே ஏர்ஹோஸ்டஸ் வந்து சொன்னாங்களாம்.
“சார். அது உண்மையிலே எறும்புகள்தான். ஃப்ளைட் இன்னும் புறப்படவே இல்லை”


2.நூத்தி இருபது வயசான சீன நாட்டுக்காரர்கிட்ட வெளிநாட்டு பத்திரிக்கைகாரங்க பேட்டிக்கு போனாங்களாம்.

”நீங்க எப்படி நூத்தி இருபது வயசு வரைக்கும் இப்படி இளமையா இருக்கீங்க”

“நான் வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்கிறேன்.தியானம் செய்கிறேன்.அதனால்தான்”

அப்போ பக்கத்து ரூம்ல இருந்து சர சரா சர சரான்னு சத்தம் கேட்டிருக்கு. நிருபர்கள் கேட்டிருக்காங்க
“அது என்ன சத்தம்”

“அதுவா.அது என்னோட அப்பாதான். உங்களுக்கு தெரியுமா? என் டாடிக்கு இன்னைக்குத்தான் நாலவது கல்யாணம் முடிஞ்சது,கொஞ்சம் பிஸியா இருக்கார் போல” என்றாராம்.


3.பிரஞ்சு மொழி சுத்தமா தெரியாத நம்ம ஊர் ஆளு பிரான்ஸுக்கு போனாராம்.

அங்க பொண்ணோட பழக்கம் கிடைச்சதாம். சைகையிலே பேசி பேசி அப்படியே இரவு விருந்துக்கு போனாங்களாம்.

அந்த பெண்ணுக்கு நம்ம ஆள ரொம்ப பிடிச்சு போயிட்டதாம். கண்ணாலே ஜாடை காட்ட காட்ட இவருக்கு ஒண்ணுமே புரியலையாம்.

“என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாராம்.”

உடனே அந்தப் பொண்ணு ,பேப்பர எடுத்து”ஒரு கட்டில் “ படத்த வரைஞ்சு காட்டி வெட்கப்பட்டு சிரிச்சதாம்.

உடனே நம்ம ஆளுக்கு சந்தோசமாம்.

சந்தோசப்பட்டு  அந்த பொண்ணுகிட்ட
“நான் கட்டில் வியாபாரம்தான் செய்றேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் மேடம்” அப்படின்னாராம்.


No comments:

Post a Comment