Wednesday 21 August 2013

சாணக்கிய தந்திரத்திற்கு ஒரு சாம்பிள்...

சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எல்லா பாடல்களோடும் முழு விளக்கோத்தோடு “ஸ்ரீ ஆனந்த நாச்சியரம்மா” வால் தொகுக்கபட்டுள்ளது என்னிடம் இருக்கிறது.
இதில் பாகம் ஐந்தில் வரும் முதல் அத்தியாத்தை கொடுத்திருக்கிறேன் படியுங்கள்.

நாடாளும் அரசனின் மந்திரி அல்லது பெரிய பதவியில் உள்ள அரசாங்க அதிகாரி மக்களின் நன்மதிப்பை பெற்று, அரசருக்கு துரோகத்தையோ அல்லது களங்களத்தையோ பெற்று விட்டால் அதை அனுமதிக்கக்கூடாது.

அவரை நேரடியாக கொன்றால் மக்களிடத்தில் மன்னனுக்கு அவப்பெயர் வரும்.

ஆகையால் அந்த அதிகாரியின் சகோதரனை கூப்பிட்டு அவனுக்கு மன்னன அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்.

இப்போது அதிகாரிக்கு அவர் சகோதரர் மேல் பொறாமையால் பகை வளரும். அரசன் தொடர்ச்சியாக அதிகாரியின் சகோதரனை பின்னால் இருந்து ஆதரித்து, அவனை விட்டே அதிகாரியை கொல்ல வேண்டும்.

அல்லது அந்த மந்திரிக்கோ அதிகாரிக்கோ வேலைக்காரி மூலம் பிறந்த மகனை தூண்டிவிட்டு, அவனுள் விசத்தை ஏற்றிவிட்டு அவனை வைத்தே அரசன் கொல்ல வேண்டும்.

இதன் மூலம் மன்னனுக்கும் கெட்ட பெயர் வராது.துரோக அதிகாரியும் கொல்லப்படுவார்.

இதில் இன்னமும் என்ன செய்ய வேண்டும் என்றால் அதிகாரியை கொன்ற அவர் சகோதரனையோ அல்லது மகனையோ, அரசாங்க அதிகாரியை கொன்ற குற்றம் சாட்டி உடனடியாக மன்னன் தீர்ப்பு சொல்லி கொன்றுவிட வேண்டும்.

ஏனென்றால் அவர்களே பிற்காலத்தில் மன்னனின் எதிரி ஆகலாம்.இதில் பொதுவாக நோக்கினால் “ஒரு அப்பாவியை” தூண்டிவிட்டு கொல்லச்செய்து விட்டு, அவனையே கொல்லும் பாவத்தை மன்னன் செய்வது மாதிரி தோண்றும்.ஆனால் அரசு விசயத்தில் இது “ராஜதர்மம்”

எப்படியெல்லாம் பிளான் பண்ணிருக்காங்க அந்த காலத்துல..

No comments:

Post a Comment