Saturday 10 August 2013

சின்னச் சின்ன துரோகங்கள்...

அன்று நானும் அலுவலகத் நண்பரும், எங்களுக்கு சிறுவயதில் நேர்ந்த சின்ன சின்ன துரோகங்களை பகிர்ந்து கொண்டிருந்தோம். செம ரகளையாக போனது.

முதலில் என்னுடையது. 

திருச்செந்தூரில் மாமா, நாங்கள் அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்று அனைவருக்கும் ஒரு போட்டி வைத்தார் “VEERA PANDIYA KATTABOMMAN" என்ற வார்த்தையில் இருந்து பல வார்த்தைகளை எடுத்து எழுத வேண்டும்.யார் அதிகம் எழுதிகிறார்களோ அவர்களுக்கே பரிசு.நானும் அண்ணனும் அப்படி எழுதிக் கொண்டிருக்கும் போது, அண்ணன் என்னிடம் கேட்டான்

“நீ எத்தன வார்த்த எழுதியிருக்க”

“நான் பதினொன்னு இதுவரைக்கு எழுதியிருக்கிறேன்”

பதிலுக்கு நான் கேட்டேன்.

‘நீ எத்தன எழுதியிருக்க”

“நான் சொல்ல மாட்டேன்”

“இல்ல நான் சொன்னேல்லால”

”இல்ல என்னால சொல்ல முடியாதுல.உன்னால ஆனத பாத்துக்க” என்று சொல்லிவிட்டான்.

எனக்கு ஒரு பிள்ளை பிறந்து,அண்ணனுக்கு இரண்டு பிள்ளை கள் பிறந்தால் கூட இப்போதும் இதை நினைத்தால் எனக்கு துரோகமாக படும் என்று நண்பரிடம் சொன்னேன்.

இப்போது அவர் அனுபவித்த துரோகத்தை சொன்னார்.

நண்பர் ஸ்கூல் படிக்கும் போது, முழுவருட கடைசிப் பரிட்சை முடியந்த அடுத்த நிமிடம், கூடப் படிக்கும் பையன் வந்து நண்பரின் எல்லா புத்தகத்தையும் அவன் தங்கைக்கு என்று வாங்கிப் போய்விடுவானாம்.

அவனும் நண்பனின் வகுப்புதான்.”நண்பா நீயும் நானும் ஒரேகிளாஸ்தான.உன் புக்க உன் தங்கச்சிக்கு கொடேன்” என்று சொல்ல நண்பருக்கு கூச்சமாய் இருக்குமாம்.அதனால் கொடுத்து விடுவாராம்.

உண்மையில் அந்தப் பையன் நண்பரின் புத்தகத்தை வாங்கி விற்று விடுவானாம்.

அடுத்த வருடம் நண்பர் தன்னிடம் உள்ள கணித பாடப்புத்தகத்தில் ஒன்றை கால்வருட பரிட்ச்சை லீவில் தொலைத்துவிட்டார்.அப்போது புது புக்கு சரியாய் கிடைக்கவில்லை.அந்தப் பையன் நண்பனிடம் வாலண்டியராக வந்து “நண்பா என்கிட்ட இரண்டு புக்கு இருக்கு.உனக்கு ஒண்ணு வேணுமா” என்று கேட்க, நண்பரும் ஆம் ஆம் என்று மண்டையை ஆட்ட,

“அப்போ காசு கொடுத்து வாங்கிக்க.நாளைக்கு எடுத்துவாரேன்’ என்று சொல்லி கவனமாக காசை வாங்கிக்கொண்டு கொடுத்தானாம்.

நண்பர் எங்கிட்ட சொன்னார் “பாருங்க பாஸ் மூணுவருசம் எல்லா புக்கையும் ஒசியில எங்கிட்ட வாங்கிகிட்டு, எனக்கு ஒரு புக்கு தேவைங்கிற போது அதுல காசு பாக்குறான் பாருங்க” என்றார்.

சின்ன சின்ன துரோகங்கள்.

No comments:

Post a Comment