Wednesday 21 August 2013

தன் வினை தன்னைச் சுடுமா ?

The boy in the stripped pyjamas என்ற திரைப்படத்தில் என்ன நடக்கும் என்றால் ஹிட்லரின் யூத அழிப்பில் பங்கேற்கும் அதிகாரி தன்னுடைய சின்னஞ்சிறு மகனோடு,அழகிய மனைவியோடு,யூதர்களை எரிக்கும் உலைகள் அருகே தங்கியிருப்பார்.

அவர் வேலை யூதர்களை தினமும் எரிப்பதை கண்கானிப்பது.அவர்தான் அந்த மொத்த யூனிட்டுக்கும் பொறுப்பு.

அவர் மகன் வீட்டில் விளையாடப்பிடிக்காமல் வெளியே திரிந்து கொண்டே இருப்பான்.

அப்படியே யூதர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பின்பக்க வேலியோரம் வந்து விடுகிறான்.அங்கு அவன் வயதிலேயே ஒரு யூதச்சிறுவன் வரிபோட்ட யூனிஃபார்மோடு இவனுக்கு நண்பனாகிறான்.

இருவரும் வேலிக்கு இருபுறமும் நின்று பேசிப்பேசி பழகுகிறார்கள்.

ஜெர்மானிய அதிகாரியின் சிறுவனுக்கு அந்த யூதச்சிறுவன் இருக்கும் வேலிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசை.மெல்ல யூதச்சிறுவனிடம் பேசி பேசி, அவனுக்கு சாப்பிட பழங்கள் கேக் எல்லாம் கொடுத்து(?) அவன் அந்த வேலியின் அந்தப்பக்கம் வரவிரும்பவதை சொல்கிறான்.

யூதச்சிறுவனும் ஒத்து கொண்டு.வேலியின் அடியில் சின்ன குழிதோண்டி இருவரும் இடம் மாறுகிறார்கள்.யூதச்சிறுவனின் கோடுபோட்ட பைஜாமாவை ஜெர்மானிச்சிறுவன் அணிந்து கொள்கிறான்.

அன்று யூதர்களை உலையில் போட்டு எரிக்கும் நாள்.வீட்டில் தன்னுடைய மகனை தேடிய அம்மா,எங்கும் காணாததால் கணவனிடம் சொல்ல,அந்த ஜெர்மானிய அதிகாரி தேடி தேடி பையன் இடம் மாறியிருப்பதை கண்டிபிடித்து விடுகிறார்.

தன்னுடைய மகனும் உலையில் தள்ளப்பட்டு விக்ஷ வாயு பீச்சப்பட்டு கொல்லப்படுவான் என்பதை அவரால் தாங்க முடியாமல் தடுக்க பார்க்கிறார்.அவர் படுகொலை நடக்கும் இடத்திற்கு போவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

நம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தகதைதான் அடுத்து சொல்லப்போவது.

அரசனின் அழகிய மகள் வயதிற்கு வர, விசேசம் நடத்த அழைக்கப்படும் புரோகிதர் அந்தப்பெண்ணின் மேல் தீராத காமம் கொள்கிறார்.அரசனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அரசனின் மகளலால் அரசனுக்கு பிரச்சனை என்று பயங்காட்டி அரசன் மனதில் நஞ்சை விதைக்கிறார்.

அரசனும் புரோகிதர் பேச்சை கேட்டு தன் மகளை கைகாலை கட்டி பெரிய கூடையில் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.

காட்டுக்கு வேட்டையாட வந்த பக்கத்து நாட்டு இளவரசன் பேரழகையுடைவன், “அது என்ன இத்த பெத்த கூடை” என்று இழுத்து கூடையை தூக்கிப்பார்க்கிறான் பேரழகியான இளவரசி.இளவரசி புரோகிதரின் சதியை சொல்ல, இளவரசன் இளவரசியை விவாகம் செய்து நல்ல பசித்த புலியை அந்த கூடையினுள் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.இளவரசியை அடைய படகில் ஒடோடி வந்து காமத்தோடு கூடையை தூக்கிப்பார்க்கும் புரோகிதனை கூடையினுள் அடைபட்டிருக்கும் பசித்த புலி அடித்து கொன்று தின்று விடுகிறது.

இந்த இரண்டு கதைகளும் தன் வினை தன்னை சுடும் என்பதை சுட்டுகிறது.

இரண்டாவது கதையில் வரும் கெட்ட புத்தியுள்ள புரோகிதனை புலி கொன்றதை படிக்க அறமாய் இருக்கிறது.

ஆனால் முதல் கதை ஜெர்மானிய அதிகாரியின் வினை அந்த அப்பாவி ஜெர்மானியச்சிறுவனை சுடுவதைதான் தாங்க முடியவில்லை

1 comment:

  1. முதல் கதை கொடுரம்!

    தன்வினை என்பது முட்டாள் தனமாக இருக்கும் போது அது சுடுகிறது என்று எடுத்துகொள்வதா... இல்லை, இதில் விதி என்று ஒன்று இணைக்கபடுகிறதா!

    ReplyDelete