Saturday 20 October 2012

கதை போல ஒன்று - 56

அடிக்கடி சிரித்தபடியே மன்னிப்பு கேட்கும் கெட்ட பழக்கத்தை எனக்கு உண்டாக்கியவர் ராமசாமிதான்.

நான் கம்பெனியில் சேர்ந்து மூன்று வருடம் அனுபவஸ்தனாகி இருக்கும் போது ( அனுபவம் என்ன அனுபவம் .சேர்ந்து மூன்று வருடம் உயிர் இருக்கிறது, அதுதான் இந்திய கம்பெனி அனுபவம்) பத்து வருடம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள சீனியராய் சேர்ந்தார்.

பாய்லர் பைப்பிங் பற்றி பிச்சி உதறுவார்.

டெக்னிக்கலா அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நான் ஒடுவேன்.

என் டேபிளில் இருந்து ஒரு பேனாவை எடுக்க வேண்டும் என்றால் கூட “ விஜி தப்பா எடுத்துக்காதீங்க! பேனா எடுத்துக்கிறேன்” 

”தப்பா எடுத்துகாதீங்க உங்க டிராயிங்ல சின்ன மிஸ்டேக் இருக்கு ”

தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் கத்திரிக்காய் கூட்டு சாப்பிடுறீங்களா!

சார்! நீங்க எனக்கு கத்திரிக்காய் கூட்டு குடுக்கிறதுக்கு ஏன் தப்பா எடுத்துகாதீங்கன்னு சொல்றீங்க” என்று கேட்டால் சிரிப்பார்.

அவரை கிண்டல் செய்வேன் இதற்கு.

டாய்லட்டில் ஒருநாள் அவரை பார்த்து,
ராமசாமி சார்! தப்பா எடுத்துக்காதீஙக் கொஞ்சம் ஒண்ணுக்கு இருந்துக்கவா” என்று அவரை கலாய்த்தது கம்பெனியில் புகழ்பெற்ற ஜோக்.

கோபமே அவருக்கு வராது.

ராமசாமியின் அட்வைஸ்கள் எப்போதும் உபயோகமானவை.
.
“நீங்க படம் போடும்போது பின்னாடி யாராவது நின்னு பார்த்தா, இப்படி போடு அப்படி போடுன்னு கமெண்ட் பண்ணினா, ஏன் விஜய் பதறுறீங்க?

எனக்கு தெரியுது உங்க கையெல்லாம் நடுங்குது. 

அதுக்கு என்ன பண்ணனும்ன்னா யாராவது பார்க்கிறாங்கன்னா, வேணுமின்னே உங்க செய்கையை மெதுவா செய்ங்க.

மவுஸ்ஸ மெதுவா மூவ் பண்ணுங்க, மெதுவாத்தான் செய்வேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கோங்க. 

ஆட்டோமேட்டிக்கா பதற்றம் குறையும். பதறாம இருக்கிறதுதான் பெரிய பலம். அத தெரிஞ்சிக்கோங்க என்பார்”.

கற்று கொடுப்பார். கூச்சபடாமல் கற்று கொளவதுதான் பெரிய வரம் என்பார்.

“தெரியாதத கூச்சபடாம கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

பத்து வருசம் எக்ஸ்பீரியண்ஸ் ஆன பிறகு இந்த டவுட்டை நீங்க கேட்டா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிருவானுங்க நம்ம ஃபீல்டுல” என்று டிப்ஸ் கொடுப்பார்.

அவரின் பிறந்த ஜாதியால் சைவ உணவுக்காரர்.

அதில் ரொம்ப ஸ்டிரிக்டாய் இருப்பார்.

சாப்பிடும் போது நாம் முட்டை மீன் கொண்டு வந்திருந்தால் முகத்தை சுளிக்க மாட்டார்.

அது பற்றி தப்பாக “நீங்கள் இதை சாப்பிடுகிறீர்கள் நீங்கள் ஒரு நீசன்” என்றெல்லாம் சொல்ல மாட்டார்.

சைவம்தான் பெரிது, நாங்கள் உங்களை விட ஒரடி உயரத்தில் பறக்கும் தேரில் பயணம் செய்கிறோம் என்றெல்லாம் அளக்க மாட்டார்.

எனக்கும் அவர் உணர்வு புரியும். 

சார் ! சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் கேட்க மாட்டேன். அது இங்கிதமல்ல என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்தானே.

ஆனால் என் கூட வேலை பார்க்கும், ராமசாமி வயதுடைய மற்ற இரண்டு மஞ்ச மாக்கான்களுக்கும் இந்த இங்கிதம் தெரியாது.

சைவ உணவாளர்களை நக்கல் செய்யும் பழக்கம் நம்ம ஊர்ல நிறைய இருக்கிறது.

அதன்படி ராமசாமியின் சைவ உணவு பழக்கத்தை ஒட்டுவார்கள் தினமும்.

”ராமசாமி மீன் சாப்பிடுறீங்களா! வறுத்தது. நல்ல வஞ்சிரம் மீனு.”

”ராமசாமி அட்லீஸ்ட் ஆம்லெட் சாப்பிடலாம் நீங்க. உடம்புல சத்து பிடிக்கும். நைட்டு வைஃப்கிட்ட பெர்பார்மன்ஸ் காட்டலாம்.ஹா ஹா ஹா”

”லெக் பீஸ இப்படி கடிச்சி சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.”

”நேத்து ராமசாமி கறிகோழி கடையில் கோழி வெட்றா மாதிரி கனவு கண்டேன்.”

ராமசாமி முதலில் சிரித்து பார்த்தார்.

எனக்கு முதலிலேயே இது பிடிக்கவில்லை. மஞ்ச மாக்கான்களிடத்தில் சொல்லவும் முடியாது.

“நீ பெரிய மயிரா! சூத்த பொத்திட்டு போடா பாடு “ என்பான்கள்.

அவர்கள் ஒட்டும் போது மட்டும் அமைதியாக இருப்பேன்.

அன்று ராமசாமியை எல்லை மீறியே ஒட்டிவிட்டார்கள்.

வழக்கமாக சிரிக்கும் ராமசாமி அன்று சிரிக்கவே இல்லை.

மஞ்ச மாக்கான்களில் சுரணையுணர்வு வேலை செய்த்திருக்கும் போல.

சாப்பிட்டு முடித்தது எல்லோரும் இருந்து பேசிக்கொண்டிருக்கும் போது,மஞ்ச மாக்கான்கள் ஆரம்பித்தார்கள்.

”ராமசாமி கோபமா எங்க மேல ”

”பாஸ் அப்படியெல்லம் ஒண்ணுமில்ல பாஸ்.” ராமசாமி மழுப்பினார்.

”பிறகென்ன எங்கள பார்த்து சிரிக்காம முகத்த உம்முன்னு வைச்சிட்டு இருக்கீங்க. ஆடு கோழின்னு சாப்பிட்டு உடம்ப வளர்த்துகோங்கன்னு சொன்னது தப்பா “

சவுண்டா சிரிச்சான்கள் மஞ்சமாக்கான்கள்.

ராமசாமி சொன்னார் “பாஸ் நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”

மஞ்ச மாக்கான்கள்” இல்ல தப்பா எடுத்துக்கமாட்டோம் . சொல்லுங்க என்றார்கள்.

மறுபடி மறுபடி ராமசாமி ”தப்பா எடுத்தக்கமாட்டீங்கல்ல!” என்று கேட்டார்.

”விஜி நீங்களும் தப்பா எடுத்தக்கமாட்டீங்கல்ல ” என்றார்.

நான் “சார் நான் இந்த டாப்பிக்குல்லே கிடையாது. அமைதியாய் இருக்கேன். என்ன இழுக்காதீங்க” என்று அவசராமாய் மறுத்தேன்.

எங்கே அவர் என்னை தப்பாய் நினைத்து விடப்போகிறாரோ என்று பயந்து.

இதற்கிடையில் மஞ்ச மாக்கான்கள் “அட சொல்லுங்க பாஸ். ஒவரா பில்ட்டப் கொடுக்காதீங்க” என்று கனைத்தார்கள்.

ராமசாமி ஆவேசமாய் திரும்பி

“பாஸ் தப்பா எடுத்துக்காதீங்க! 

சத்தியமா தப்பா எடுத்துக்காதீங்க!

நீங்க ரெண்டு பேரும் பேசினா மாதிரி வேற எவனாவது பேசியிருந்தான்னு வெச்சுக்கோங்களேன். ’பீ மிதிச்ச செருப்பை எடுத்து’ மூஞ்சியிலேயே அடிச்சிருப்பேன்.”

என்று சொல்லி எழுந்து போய்விட்டார்.

No comments:

Post a Comment