Sunday 21 October 2012

சேறு அப்பிய ...

தொட்டும் தொடாத ரோஜா மென்மையும்
மழையை வருடும் மெல்லிய ஒளியும்
மழலை உதட்டின் எச்சிலும்
தூரிகை தளும்பும் வர்ணமாய்,
மழைபட்ட களிமண்ணாய்
குழைந்து கிடக்கும் மனதில்.

எல்லாம் தாண்டி
நீர் விட்டு கரைக்கவோ
நிலம் உரசி தேய்க்கவோ
தத்துவங்களால் தகர்க்கவோ முடியாது
உள்ளத்தின் ஒரத்தில்
உறைந்து கிடக்கும் பழி உணர்ச்சியால்
சேறு அப்பிய பன்றியாய் நான்

1 comment: