Saturday 7 July 2012

கதை போல ஒன்று - 25

மச்சி உனக்கென்ன வேணும், பெப்ஸியா, இல்ல கோக்கா, தம்ஸப்பா, ஸ்பிரைட்டா, ஃபேண்டாவா. என்னடா வேணும் ? சொல்லித்தான்
தொலையேன்டா நாய ?

”இல்ல நான் மாஸா அல்லது ஸ்லைஸ்தான் குடிப்பேன் என்றேன்.

எல்லோரும் என்னை விநோதமாக பார்த்தார்கள்.

“ஐயே இவன் கொயந்த பயண்ட்டா “ சிரித்தார்கள்.

இதுமாதிரி விசயங்களில் ஞானபழமாகவே என்னை பார்த்தார்கள்.

ஓடும் பஸ்ஸில் ஏறமாட்டேன். 23 சி யெல்லோ போர்ட்டு ஆல்பெர்ட் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் நிற்காது.
அதனால நண்பர்கள் பஸ் திரும்பும்போது குதித்து விடுவார்கள்.

என்னையும் குதி குதி என்று கத்துவார்கள். என்னால முடியாது. எக்மோர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி நடந்து வருவேன்.

”ஏன்டா! இவன வெச்சிகிட்டு இங்கிலீக்ஷ் படம்தான் எடுக்கனும் “ ன்னு கலாய்ப்பான்கள்.

பல சமய்ங்களில் ஜாலியா எடுத்துகிட்டாலும், இரும்பு குதிரைகள்ல வர டிரக் டிரைவர் மாதிரி எனக்குள்ளும் ஒருவன் கடுமை பழகி கொண்டிருந்தான்.

”என்னைக்காவது உங்கள அசத்துரேன் பாருங்கடா டேய் “ ன்னு மனசுக்குள்ளயயே சொல்லிகிட்டிருந்தேன்.

ஒடும் பஸ்ல எப்படி இறங்கிறாங்கிறத கூர்த்து பார்த்தேன். அதுல பாத்தீங்கன்னா அறிவியலின் சடத்துவ ( அதாங்க Inertia) விதியை பின் பற்றுகின்றனர். பஸ் ஸ்பீடுக்கு போய் கொண்டிருக்கும் உடலையும் காலையும் உள்ள தொகுப்பில் காலை மட்டும் சட்டென்று ஊன்றினால், உடல் எடையின் வேகத்தை கட்டுபடுத்த முடியாதல்லவா ?

பஸ்ஸில் இறங்கும் போது சட்டென்று குரங்கு பிடியாய் காலை ஊன்றாமல், ஏன் கொஞ்சம் ஒடி நிற்கின்றனர் என்று கண்டுபிடித்தேன். (inertia தான்)

இப்படி மேன்லியா என்னை காட்ட என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டே இருந்தேன்.

தனியாக தம்ஸ் அப் குடித்து பார்த்தேன். ப்ஹா! ப்ஹா! என்று வாந்தி எடுத்தேன்.

யாராவது கேள்வி கேட்டால் சட்டென்று பதில் சொல்லாமல் , மேன்லியா பார்த்து தாடிய சொறிஞ்சிகிட்டு மெதுவா சொல்ல டிரை பண்ணினேன். முடியல. அவமானபடுத்து போல் இருந்தது.

ஒருநாள் சட்டென்று பல்தேய்க்கும் போது பொறி தட்டியது. நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன். “ ”சும்மா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருந்தா வேலைக்காகாது. பிராக்டிக்கலா இறங்கனும்”.

அன்று மாலை நண்பர்கள் எல்லோரும் மத்திய கைலாக்ஷில் இருந்து கிண்டி வந்து, கிண்டி எஸ்டேட் பஸ் ஸ்டாண்ட் உள்ள போகிறதுக்கு நிற்கிறோம்.

“மச்சி நீ சப்வேல வாடா ! நாங்க டிவைடர் ஏறி குதிச்சு வந்திர்றோம் “ என்று சொல்லி சட்டென்று ரோடு கிராஸ் செய்த்து டிவைடரை லாவகமாக ஏறி குதித்து, மறுபடியும் ரோடு கிராஸ் செய்து விட்டான்கள்.

டிவைடர் என்பது ரோட்டை பிரிக்க வைத்திருக்கும் பரவளைய ( parapola) கம்பிகள்.

நான் அவமானமாய் ஃபீல் பண்ண ஆரம்பித்தேன்.

சட்டென்று நானும் சப்வேயில் வராமல் ரோடு கிராஸ் செய்த்து மஞ்சள் நிற அரைவட்ட தொகுப்பான இரும்பு டிவைரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பசங்கள் “ஓஹ்ஹோ “ என்று கைதட்டி சவுண்டு கொடுக்கிறான்கள்.

ஆனால் பாருங்கள் பக்கத்தில் வர வர டிவைடைரின் உயரம் அதிகமாகி போகிறது. அதை ”தாண்டி விடுவேனா ?”என்ற எண்ணம் ”தாண்ட முடியாது” என்ற எண்ணமாகி விட்டது.

ஆனாலும் ரோடு கிராஸ் பண்ணிட்டேனே. என்ன பண்றது பாஸ் ?

டிவைடரை துள்ளி குதித்து ஏறாமல், சுவர் ஏறுவது மாதிரி கால் போட்டு , மறு காலை கீழே போடும் போதானா அந்த மூன்று ’நீண்ட டிரக்குகள்’ மறுபுறம் வரவேண்டும்.

இப்போ ரெண்டு காலையும் டிவைடரின் இரண்டு பக்கமும் போட்டு பரிதாபமாக முழிக்கிறேன்.

நண்பர்கள் “வாடா லூசு , மச்சி வாடா “ என்று கத்துகிறான்கள்.

பதட்டத்தில் என்னால் கிழே இறங்க முடியவில்லை.

நான் ஒரு மஞ்சள் நிற குதிரையை ஓட்டுவது போல் இருக்கிறது. இரண்டு பக்கமும் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.

செல்லமாள் காலெஜ் பொண்ணுங்கள் எல்லாம் சிரிக்கின்றனர். தாத்தா சிரிக்கிறார். கரும்பு சாறு பிழியும் பாட்டியும், பெட்ரோல் பங்கு ஊழியர்களும் அல்லவா சிரிக்கிறார்கள்.

கற்பனை செய்துதான் பாருங்களேன் கிண்டி பரபரப்பு சாலையில் ஒரு இளைஞன் டிவைடரில் சிறுக்குழந்தை மாதிரி தவித்து உட்கார்ந்திருப்பதை. அது நாந்தான் அய்யா !

கடைசியாக பிரவீன் ஓடி வந்து மெல்ல என்னை கிழே இறக்கி, கைத்தாங்கலாக கூட்டி போனான்.

என்னை யாரும் கிண்டல் செய்ய வில்லை. கடையில் உட்கார வைத்து தண்ணீ கொடுத்து, பஜ்ஜியும் வாங்கி தந்தான்கள்.

அப்போ ஒருத்தன் சொன்னான் “ விஜய் ! உன்னால உடைக்க முடியிற பலூன மட்டும் உடை .புரியுதா ?
சும்மா மயிராட்டாம் ஸீன் போட்டா, இப்படி நடு ரோட்டில் குதிரை ஒட்ட வேண்டியதுதான் “

இப்போ நான் சிரிக்க, நண்பர்கள் கூட்டம் “மச்சி டிரீட்டு டிரீட்டு” என்று கத்த ஆரம்பித்தது... :

No comments:

Post a Comment