Monday 16 July 2012

தர்மம் தலை காக்கும்...

ஹைதிரபாத்திற்கு குடும்பமாய் பிரயாணம் செய்யும் போது, எதிர்தாற்போல் இருந்த நாற்பது வயதுள்ள பெண் , ரமணிசந்திரன் நாவல் படித்து கொண்டிருந்தார்.

மீரா வர்ஸினி விளையாடும் போது வழக்கமாக எந்த உம்மனாமூஞ்சி ஆட்களும் சிரிப்பார்கள்.

ஆனால் இவர் சிரிக்கவில்லை.

அதனால் எனக்கு அவர் மேல் இனம் தெரியாத எரிச்சல் வந்தது.

சாப்பிடும் வேளையில் எல்லோரும் சாப்பிட அவர் சாப்பிடவில்லை. 

சரி அப்புறம் சாப்பிடுவார் என்று நினைத்தோம். சாப்பிடவில்லை.

படுக்கையை ரெடி பண்ண ஆரம்பித்தோம். அப்பவும் சாப்பிடுவதற்கான அறிகுறி இல்லை.

நாங்கள் படுத்தோம். அவரும் படுத்து தூங்க ரெடியானார்.

லைட் ஆஃப் பண்ணியாச்சு.

தூங்கும் போது திடீரென அவரிடம் ஏதோ உந்துதலால் சத்தமாக “ நீங்க சாப்பிடலையா மேடம். சாப்பிடாம எப்படி தூங்குவீங்க” என்று கேட்டேன்.

அவர் சிறிய திகைப்பை காட்டி “ நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிட்டீங்கல்ல அதுல ஒரு பழம். ஒரே ஒரு பழம் கொடுங்க போதும்.” என்றார். திரும்ப திரும்ப “ஒரு பழம். ஒரே ஒரு பழம் “ என்றார்.

வைஃப் அதை பதட்ட அன்பாய் எடுத்து கொடுக்க சாப்பிட்டார்.

எனக்கென்னவோ அவர் சாப்பிடாமல் படுத்தற்கு பின்னால் அழமான ஏதோ காரணம் இருக்கும் என்று தோணிச்சு. 

அவர் கிட்ட ”சாப்பிட்டீங்களா” என்று கேட்க ஏன் இவ்வளவு தயங்கினேன் என்பதும் வெட்கத்தை கொடுத்தது.

எப்படியோ என்னுடைய ”தர்மம் தலை காக்கும்” பேங்கில் ஒரு ஆரஞ்சு பழம் அளவாவது புண்ணியம் கிடைத்த மகிழ்ச்சியில் தூங்க போனேன். :))

No comments:

Post a Comment