Thursday 5 July 2012

மும்பையில் பெண்கள்


மும்பை - டோங்கிரி

ஜெனாபாய் கணவனை இழந்து, பின் அரிசி பதுக்கலில் கமிசன் வியாபாரம் செய்கிறார்.

அதில் போலீஸ்தொல்லை அதிகரிக்க, ஒருநாள் மும்பையின் அப்போதைய மிகப்பெரிய தாதாவாகிய “வரத ராஜ முதலியார்” ( அதாங்க நம்ம வேலு நாயக்கர். )டம் உதவி கேட்க, வரதராஜ முதலியார் ஜெனாபாய்யை திருட்டு மது விற்கும் பெரிய கும்பலை நிர்வகிக்க சொல்கிறார்.

அதிலிருந்து ஜெனாபாய் மிகப்பெரிய சக்தியாக உருவாகிறார்.

இத்தனை தப்பான தொழிலை செய்தாலும் அடிப்படையில் ஜெனாபாய் ஒரு அம்மாவின் குணத்தோடையே இருக்கிறார்.

மும்பை மிகப்பெரிய தாதாவான மஸ்தான் ஜெனாபாயிடம் உதவி கேட்கிறார்.

பெரிய புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போட்டி நடக்கிறது.

அதற்கு “ செலியாஸ்” என்னும் குஜராத்தி தாதாக்கள் தடையாக இருக்க மஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் “செலியாஸ்” தாதாக்கள் ஆக்ரோசமானவர்கள்.

ஜெனாபாய் மஸ்தானிடம் “செலியாஸை” அடக்க தாவூத் இப்ராகிம் குரூப்பையும் , பதான் சகோதர்களையும் ( கிரிக்கெட பதான்கள் அல்ல :) ) ஒன்று சேர்க்க சொல்கிறார்.

மஸ்தான் தாதா எப்படி ஒன்று சேர்ப்பது என்று தவிக்கிறார். ஜெனாபாய் தன் மதி சாணக்கியத்தனத்தால் தாவூத் மற்றும் பதான்களை ஒன்று சேர்கிறார்.

மும்பை நிழல் உலக தாதாக்ளின் புகழ்பெற்ற சமாதான உடன்படிக்கை ஏற்பட ஜெனாபாய்தான் காரணமாகிறார்.

1993 மும்பையில் மதக்கலவரம் நடக்கும் போது அதை சமானபடுத்த ஜெனாபாய் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இது போல் மும்பை தாதா நிழல் உலகத்தில் நிறைய பெண்கள் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் அது வெளியே தெரியாது. அதை பத்தி பேசுவதுதான் இந்த புத்தகம்

MAFIA QUEENS OF MUMBAI , STORIES OF WOMEN FROM THE GANGLANDS

WRITTEN BY S.HUSSAIN ZAIDI WITH JANE BORGES

எளிமையான ஆங்கிலம். சுவாரஸ்யம். புக்கை எடுத்தால் வைக்க முடியாது. ஒரே சிட்டிங்கில் படித்தேன்.

No comments:

Post a Comment