Monday 26 January 2015

பெண்ணின் முடிகள்...

மானுடவியல் என்றால் என்ன?
மனிதனைப் படிப்பதுதான் மானுடவியல்.
மனிதனின், உணவு,உடை,உறைவிடம்,இனம்,மொழி,கலாச்சாரம் எல்லாத்தையும் படிக்கிறது மானுடவியல்.
மனிதனை ஒரு அறிவியல் பொருளாக எடுத்துக் கொண்டு நேரடியாக பார்ப்பது.எந்த வித நெகிழ்ச்சியும் இல்லாமல் அறிவியலை மட்டும் பார்ப்பது.
ஏன் சீனர்கள் பூச்சி சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் மத்திய சீனாவில் 200 வருடம் உணவுப் பஞ்சம் விட்டு விட்டு வந்து கொண்டே இருந்தது.அதனால் எதில் எல்லாம் புரதம் கிடைக்கிறதோ அதையெல்லாம் மக்கள் வேட்டையாடினார்கள்.இது மானுடவியல் கருத்து.இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.
மானுடவியலுக்கு ஜாதி மத இன நெகிழ்ச்சிகள் கிடையாது.அறிவியலும் தகவல்களும் மட்டுமே அதற்கு தெரியும்.
நாமெல்லோரும் எஸ்கிமோக்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம்.ஆனால் அவர்களின் வாழ்க்கைமுறையை உலகிற்கு தெரிய வைத்தவர் ஃபிரான்ஸ் போஸ் என்னும் மானுடவியலாளர்தான் ( நவீன் மானுடவியலின் தந்தை).
வளர்ந்த நாடுகள் வளரும் நாட்டு மக்களை மிருகங்கள் மாதிரி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இந்த துறை மீது உண்டு.
நான் இங்கே பதியப்போவது ’டெஸ்மொண்ட் மோரிஸ்' (Desmond morris) என்பவர் எழுதிய “Naked woman" என்ற புத்தகத்தில் வரும் கட்டுரை பற்றி .
இந்த டெஸ்மொண்ட் மோரிஸ் மூன்று முக்கிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.அவை 1.Naked Ape 2.Naked Man 3.Naked Woman.
இந்த மூன்று புத்தகங்களிலும் அவர் குரங்கு,ஆண்,பெண் என்ற மூன்று உயிரனங்களின் ஒவ்வொரு உடலுறுப்பாக எடுத்து அதன் பின்புலத்தை ஆராய்ந்திருப்பார்.கண்,காது ,மூக்கு,அந்தரங்க உறுப்புகள் என்று எல்லாம் எடுத்து அவற்றின் தேவைகள் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார்.
அதற்காக இது உயிரியல் புத்தகம் என்று நினைத்து விட வேண்டாம்.
சரி இப்போது “Naked Woman" புத்தகத்திலிருந்து “Pubic hairs" என்ற கட்டுரையைப் பற்றி எழுதுகிறேன்.
Pubic hairs என்பது வளர்ந்த பெண்ணின் பெண்ணுறுப்பில் வளரும் முடி.இதன் தமிழ் அர்த்தம் பார்த்தால் “அந்தரங்க முடி” என்று வருகிறது.சரி நானும் அதையே உபயோகப்படுத்துகிறேன்.இப்போது பத்தியை டெஸ்மோண்ட் மோரிஸ் சொல்வதாகவே நினைத்து படியுங்கள்.
பெண்ணுக்கு அந்தரங்க முடி அவள் பிறப்புறுப்பைச் சுற்றி பதினைந்து வயது வாக்கில் வளரத்தொடங்குகிறது.சிறுவயதில் இருந்தே பளபளப்பாய் இருக்கும் பெண்ணுறுப்பில் திடீரென்று முடி வளரும் போது, பெண் மிகவும் குழம்பிப் போய் விடுகிறாள்.எதற்காக அந்த முடிகள்? அதன் காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வருவன
-ஆதிகாலத்தில் ஆணை அழைக்கும்,உடலுறவு அடையாளமாக இருந்தது.பெண்ணின் குறியில் முடி அடர்த்தியாய் இருந்தால் அவளுடன் கூடலாம் என்ற மறைசெய்தியை முடி சொன்னது
-அந்தரங்க முடியின் வளர்ச்சியால்,வயதுப் பெண்ணுக்கு குறியில் சுரக்கும் உறவு வேட்கையைத தூண்டும் வாசனைச் சுரப்பிகளின் வாசனையை தக்க வைக்க முடியும்.அந்த வாசனை ஆதிஆணைத்தூண்டும்.ஆனால் தற்காலத்தில் பெண்கள் உள்ளாடை அணிவதால் அது ஒரு நாற்றமாக உருவெடுப்பதை பார்க்கிறோம்.
-உடலுறுவின் போது,அந்தரங்கமுடிகள், ஆணின் உறுப்பு பெண்குறியை சுற்றியிருக்கும் உப்பிய சதைப் பகுதியை காயப்படுத்தாமல் தடுக்குமாம்
-ஒரு இயற்கை உடையாக காயம், குளிர், வெயிலில் இருந்து காப்பது.
ஜெர்மனியை சேர்ந்த மானுவடவியலாளர் தென் பசிபிக்கில் இருக்கும் பழங்குடியனரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், போது அங்குள்ள் பெண்களுக்கு அடர்த்தியான அந்தரங்கமுடி இருப்பதைக் கண்டாராம்.அதைவிட அவருக்கு ஆச்சர்யம்,” நாம் கைகழுவிய பிறகு கைத்துடைக்க கைக்குட்டையை உபயோகப்படுத்துவது மாதிரி அந்த பழங்குடிப் பெண்கள் தங்கள் கைகளை அவர்கள் குறிமுடியில் துடைத்தார்களாம்.
மனிதன் நாகரீகத்தில் வளர வளர இந்த அந்தரங்க முடிகளை வெறுத்தான்.புனிதமடையும் போது பெண்ணின் குறிமுடிகளை (அந்தரங்க முடி என்ற சொல் வேண்டாம் குறிமுடி நன்று) மழிக்கச் சொன்னான்.அதை நாற்றமடிக்கும் அழுக்கான பொருளாய்ப் பார்க்க ஆரம்பித்தான்.முதன் முதலில் வந்த பெண்ணியவாதிகள் குறிமுடிகளை எடுப்பதை எதிர்த்தார்கள்,எப்படி மேக்கப் ஒரு பெண்ணை அலங்காரப் பொருளாய் ஆக்குகிறதோ அது போலத்தான் குறிமுடி எடுப்பதும் என்று வாதிட்டார்கள்.
இதில் பார்த்தீர்களானால் அந்த காலத்து ஐரோப்பிய சிலைகளில் பெண் சிலைகளில் குறிமுடியை வடிக்க மாட்டார்கள்.அது மொழ மொழவென்றே இருக்கும்.
முன்காலத்தில் ஜான் ரஸ்கின் என்னும் சிலை செய்யும் கலைஞருக்கு இதனால் ஒரு பிரச்சனை வந்தது.அவர் சிலைகளில் இருப்பது போலத்தான் வளர்ந்த பெண்களின் குறிகளும் முடியில்லாமல் இருக்கும் என்று நினைத்து வந்திருக்கிறார்.கொஞ்சம் அப்பாவி.ஆனால் முதலிரவில் மனைவியின் குறியில் முடிகளைப் பார்த்து அவருக்கு அதிர்ச்சி.அந்த அதிர்ச்சியினால் அவரால சரியாக உடலுறவு கொள்ள முடியவில்லை.இப்படியே கொஞ்ச நாள் போக,எரிச்சலுற்ற மனைவி விவாகரத்து வாங்கிப் போய்விட்டாராம்.
குறிமுடியை ஏன் பெண்களும் எடுக்கிறார்கள்.ஏன் ஆண்கள் கூட அதை ஆமோதிக்கிறார்கள் என்றால்
-குறிமுடியை எடுத்தால் பெண்ணின் உறுப்பு அழகாக இருக்கிறது.அதன் பிளவு (இது கடவுளின் தங்கக் கோடாலியால் ஏற்பட்ட பிளவாம்) தெளிவுற தெரிந்து ஆண்களின் காமத்தை தூண்டும்.
-குறிமுடி இல்லாமல் இருக்கும் போது அது அவர்களின் இளமையைக் குறிப்பதாக நினைத்தார்கள்.நிறைய முடியகள் இருந்தால் வயதானவர்கள் என்று நினைத்து விடக் கூடும் என்று பெண்கள் அச்சப்பட்டார்கள். (இப்படி குறிமுடி இல்லாத பெண்ணுறுப்பை ரசிக்கும் ஆண்கள் குழந்தைகளை கூட காமமாக நினைக்கும் குணமுள்ளவர்கள் என்றெல்லாம் ஆரம்பத்தில் பிரச்சாரம் நடந்ததாம்)
-குறிமுடியில்லாத பெண்ணுறுப்பு இன்னும் இன்பம் தரக்கூடியதாக் நினைத்தார்கள் .எளிதில் கிளர்ச்சியுறும் என்று நம்பினார்கள்.வாய் வழிப் புணர்ச்சியை குறியில் முடியிருந்தால் சரிவர செய்யமுடியாது என்ற கருத்தும் காரணம்.
-நிறையப் பெண்கள் குறிமுடியை மழித்து விட்டால் எளிதாக நடந்து போக முடியவதாக நினைக்கிறார்கள்.அதை வேண்டுகிறார்கள்.
வரலாறு இந்த குறிமுடி எடுப்பதைப் பற்றி என்ன சொல்கிறதென்றால்...
-எகிப்தியர்கள் தங்கள் குறிமுடிகளை தேனும் மூலிகை எண்ணெய்யும் கலந்த கலவையிட்டு எடுத்தார்களாம்.
-சாலமன் மன்னன்,ராணி ஷீபாவை மணமுடித்ததும் அவள் முடியை நீக்குமாறு வேண்டினார் என்பதாக வரலாறு
-கிரேக்கர்கள் பெண்குறி அழகை பார்க்க ரசிக்க விரும்புபவர்கள்.அதனால் கிரேக்கப் பெண்கள் ஒவ்வொரு முடியாய் பிய்த்தோ,அல்லது தீயை வைத்து கருக்கியோ,அல்லது சாம்பல் வைத்து தேய்தோ பெண் குறியின் முடியை எடுப்பார்கள்.
-ரோமானியர்கள் இதற்கென்றே தனிக் கருவிகள் வைத்திருந்தனர்.
-செஞ்சிலுவைப் போருக்காக வந்த ஐரோப்பியர்கள் அரபுப் பெண்களிடம் குறிமுடி நீக்கும் கலையைக் கற்றுக் கொண்டு,அதை ஐரோப்பாவுக்கு பரப்பினர்.
-விக்டோரியன் காலத்திலும் குறிமுடி என்பது அசிங்கம்,நாற்றம் என்றொரு எண்ணமிருந்தது.குறிமுடி மழித்தல் முக்கியமான வேலையாய் இருந்தது குடிமக்களுக்கு.
1960 யில் மேரி குவாண்ட் என்னும் பெண் தான் தன் கணவனின் உதவியால் ஆர்ட்டின் (இதயம்) வடிவம் உள்ளமாதிரி குறிமுடியை கத்தரித்தேன் என்று சொன்னா.அப்போது மக்கள் மத்தியில் அது ஒரு பரபரப்பான விசயமாக இருந்தது.
1970 களில் இருந்து மேலை நாடுகளில் குறிமுடியை டிசைன் செய்யும் மோஸ்தர் வந்தது.இதயம் வடிவத்தில் வெட்டிக்கொள்வது,ஹிட்லர் மீசை மாதிரி வெட்டிக்கொள்வது,கேள்விக்குறி மாதிரி குறிமுடி வெட்டிக்கொள்வது,முக்கோணம்,செவ்வகம் என்பது மாதிரி பிடித்த விதமாக பெண்கள் குறிமுடி வெட்டும் சலூன்கள் வந்து விட்டன.
எப்படி குறிமுடியை எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்களோ, அது மாதிரி குறிமுடியை வைப்பதிலும் ஒரு கூட்டம் ஆர்வமுடையதாயிருக்கிறது.அதை Merkin-wearing என்றழைக்கிறார்கள்.அவற்றின் தேவையென்ன...
-அழகிற்காக தலையில் டோப்பா வைப்பது போல,குறிமுடியை வைத்து வைத்துவிடுவார்கள்.
-நோய்வாய்ப்பட்டிருந்த பாலியல் தொழிலிலாளிகள், தங்கள் பெண்ணுறுப்பை மறைக்க வைத்தார்கள்
-சினிமாவில் காட்டுவதற்காக இந்த குறிமுடி டோப்பாவை உபகயோகித்தார்கள்.
இவ்வாறு டெஸ்மோண்ட் மோரிஸ் எழுதிய கட்டுரையின் சுருக்கம முடிகிறது.
இது போல இந்த Naked Woman புத்தகத்தில் ஒவ்வொரு உறுப்பாக எழுதியிருப்பார்.

2 comments: