Sunday 11 January 2015

ஒருவருடம் போனால் ஒருவயது போகிறதா ?

சந்தர்ப்ப சூழ்நிலையில், பிளஸ் டூ முடித்து விட்டு முதலாமாண்டு டிப்ளமா இன் மெக்கானிக்கல் சேர்ந்த போது மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தேன்.
அதற்கு காரணம் இந்த சமூகம் எனக்குள் திணித்திருந்த மொக்கை பயங்கள் என்பதை இப்போது உணர்கிறேன்.
சிறுவயதில் எனக்கு டியூசன் எடுக்கும் ஜான் பேட்ரிக் சார் ஒரு எளிய கணக்கை சொல்வார்.
ஒருவன் எல்.கே.ஜி. யில் ஒருவருடம் பிந்தி சேருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.பிற்காலத்தில் அவன் மாதம் 5000 ரூபாய் சம்பளம் வாங்கினால், வருடம் 60000 ரூபாய் சம்பளத்தை அவன் இழக்கிறானே.அதனால் வாழ்க்கையில் ஒரு வருடத்தைக் கூட வேஸ்ட் செய்யக் கூடாது.
சட்டென்று கேட்பதற்கு இது நல்ல விசயமாக தோன்றும்.ஆனால் அப்படியில்லை.இது மாதிரி சிந்தனைகள் மனிதனுக்கு தேவையில்லாத நெருக்கடிகள்தான் கொடுக்கும்.
ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் போகும் பட்சத்தில் ஒருவருடத்தை இழக்கும் பட்சத்தில் மாணவனின் மனம் என்ன பாடு படும்.
அடுத்து,எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடுகிற மனித வாழ்க்கையில் ஒருவருடத்தை கூர்ந்து கவனித்து காப்பாற்றிக் கொள்ளும் அவசியம் தேவையில்லை.
ஜான் பேட்ரிக் சார் சொன்ன கதையை உள்வாங்கிய மனநிலையில் நான் வளர்ந்ததாலும்,
“பிளஸ் டூ முடிச்சிட்டு டைரக்ட் செகண்ட் இயர் சேரலையியா? அப்ப நீ ஏன் பிளஸ் டூ படிக்கனும்.இரண்டு வருஷம் வேஸ்டுதானே” என்பதான நெருக்கடியில் இருந்தேன்.திடீர் திடீரென்று அந்த ஞாபகம் வரும்.
நான் ஏதோ வழி தவறிய ஆட்டுக்குட்டி போல ஒரு உணர்வு இருக்கும்.
அப்போதெல்லாம் நான் நினைப்பேன் “ச்சே இந்த பிளஸ் டூவ ஏன்தான் படிச்சேனோ? வயசெல்லாம் வேஸ்ட்”.
அதன் பிறகு டிப்ளமா முடித்து, பார்ட் டைமில் பொறியியல் படித்து இந்த So called சமூகம் எதிர்பார்க்கும் சம்பாத்தியதையும் வேலையையும் பெற்ற பிறகு, இப்போது யோசித்துப் பார்க்கும் போது ஏதாவது இழந்திருக்கிறேனா என்று நினைக்கும் போது ஒன்றுமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது.
ஏன் அப்படி இரண்டு வருடம் வேஸ்ட் செய்தது பற்றி அதிக கவலை கொண்டோம் என்று நினைத்தால் வெட்கமாயிருகிறது.
அப்படியானால் விதி வசத்தால் ஏன் பிளஸ் டூ படித்தேன் என்பதற்கான பதிலாக நினைப்பது “ உன் வாழ்க்கையை அனுபவிக்க கடவுள் ?
உன்னை பிளஸ் டூ வரை படிக்க வைத்தார்” என்பதுதான் .
பிளஸ் டூ படிப்பதற்கும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு உலகின் எல்லா சப்ஜெக்டுகள் மீதும்( இந்த கார் பைக் மற்றும் ரியல் எஸ்டேட் தவிர) ஒரு ஈர்ப்பு இருக்கிறது. சோசியல் சயின்ஸ்,கெமிஸ்ட்டிரி,பிஸிக்ஸ்,கணிதம், பாட்டனி, ஸூவாலஜி என்று எந்த புத்தகத்தை எடுத்தாலும் படிக்க முடியும்.படிக்கும் ஆர்வம் இருக்கும்.
இந்த ஆர்வத்தை இந்த Horizontal தன்மையைக் கொடுத்தது அந்த பிளஸ் டூ படிப்புதான்.
ஒரு லைப்ரரிக்குச் சென்றால் எந்த செக்சனிலும் சென்று என்னால் படிக்க முடிகிறது.நான் அன்று என்ன படிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியாது.
ஃபாரெஸ்ட் கெம்பில் நாயகனின் அம்மா சொல்வாரே” வாழ்க்கை ஒரு சாக்லெட்கள் கொண்ட பெட்டி.எந்த சாக்லெட் எப்போது கிடைக்கிறது என்று நமக்கே தெரியாது”.
அது போல அன்று எதை தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று எனக்கே தெரியாது.ஆனால் உயிருள்ளவரை ஏதாவது ஒன்றை தேடும் ஆர்வமும் மனநிலையும் இருக்கிறது.
இதைத்தான் வாழ்க்கையின் Substance ஆக நினைக்கிறேன்.நான் பெற்ற பேறாக நினைக்கிறேன்.
படிப்பு ன்பது அறிந்து கொள்ளுதல்தான்.அது எந்த காலத்திலும் வீண் இல்லை என்ற எழுத்துக் கருத்தை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன் என்பதை சொல்லவருகிறேன்.

No comments:

Post a Comment