Monday 26 January 2015

சீனர்களின் பன்றி மோகம்...

சீனர்களின் பன்றிக்கறி(Pork) உண்ணும் ஆர்வத்தைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.அதிலிருந்து கொஞ்சம்.
-1970 க்குப் பின் சீனா அதிக பன்றிகளை உற்பத்தி செய்தது, உட்கொண்டது. சுமார் 50 கோடி பன்றிகள் சீனாவால் உற்பத்தி செய்யப்படுகிறது.அதை சீன மக்களே உணவாகக் கொள்கின்றனர்.உலகின் மொத்த பன்றிகளில் பாதி அளவு இதுவாகும்.
-மேண்டரின் மொழியில் மாமிசம் என்றாலும் பன்றி இறைச்சி என்றாலும் ஒரே பொருள்தான்.
-சீன ராசி நிலையில் பன்றியும் ஒரு குறியீடு. பன்றி செழிப்பு,நன்மை போன்றவற்றைக் குறிக்கும் நல்ல விசயம்.
-ஹான் பரம்பரை மக்களின் கல்லறையில் நிறைய பன்றி பொம்மைகள் இருந்தனவாம்.ஒருவேளை அது உணவாக படைக்கப்பட்டிருக்கலாம்.
- கிட்டத்தட்ட பன்றியின் அனைத்து பாகங்களையும் சீனர்கள் உண்டு விடுகின்றனர்.எதையும் விட்டு வைப்பதில்லை.
-1950 களில் பஞ்சத்தால் பன்றிக்கறிக்கு தட்டுப்பாடு வரும் போது சீனமக்கள்,பன்றியின் கொழுப்பை காய்கறியில் தேய்த்து அந்த வாசனையில் உணவை ருசித்திருக்கிறார்கள்.
-சராசரியாக ஒவ்வொரு சீனக் குடிமகனும் வருடத்துக்கு 39 கிலோ பன்றி இறைச்சியை உட்கொள்கிறான். 1979 யில் இருந்ததை விட இது ஐந்து மடங்கு அதிக உட்கொள்தல் ஆகும்.
-2007 யில் பன்றிகளுக்கு நோய் வந்து, இறைச்சித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கறி வாங்க அதிக போட்டி இருந்ததாம். சூப்பர் மார்க்கெட்டுகளில் தள்ளு முள்ளு நடந்து காயங்கள் சகஜமாயிற்றாம்.
-ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்தி செய்ய 6 கிலோ உணவு தேவைப்படுகிறது.சீனப் பன்றிகளை மொத்தமாய் உற்பத்தி செய்யும் போது அதற்கு சோயா பீன்ஸுகளை உணவாக கொடுக்கிறார்கள்.
-உலகில் உற்பத்தியாகும் சோயா பீன்ஸுகளில் பாதி அளவை சீனாவே இறக்குமதி செய்கிறது.அவைகளை பன்றிகள் தின்று தீர்க்கின்றன.
-சீனாவுக்கு சோயா பீன்ஸ் ஏற்றுமதி செய்ய பிரேசில்,அர்ஜெண்டைனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அதிக சோயாவை சாகுபடி செய்ய காடுகளை வேகமாக அழிக்கின்றனர்.இது சுற்றுச் சூழலுக்கு சவாலான விசயமாகும்.
-சீனாவில் வளரும் பன்றிகள் ஒருநாளைக்கு 5 கிலோ கழிவுகளை இடுகின்றன.இதனால் நிலத்துக் கேடு விளைகிறது. மேலும் அந்தக் கழிவுகளில் இருந்து வெளியேறும் மீதேனும் ,நைட்ரஸ் ஆக்சைடும் மாசு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடை விட 300 மடங்கு கொடியதயாகும்.
இப்படியாக சீனர்களின் பன்றி மோகம் பற்றி படிக்கும் போது மலைப்பாக இருக்கிறது 

No comments:

Post a Comment