Friday 14 September 2012

கதை போல ஒன்று - 49

”அந்த புக்கு என்னதுண்ணே” கையை நீட்டி கேட்டேன்.

”அது ராணி புக்குப்போ”

பின்னால் உமர் பாருக் படபடப்போடு கையை உதறி உதறி நின்றான்.

பதட்டத்திற்கு காரணம் கடையின் முன்னால், வாழ்க்கையில் முதன் முதலில் 
இருவரும் செக்ஸ் புக் வாங்க நிற்கிறோம்.

அப்போது ஒன்பதாம் வகுப்புதான் படித்து கொண்டிருந்தோம்.

பெர்ட்ரண்ட் ரசல் Period of Latency என்பார்.

அதாவது பத்து முதல் பதிமூன்று வயது வரை ஆண் பாலுணர்வுகளை வெளியே பகிர்ந்து கொள்ள மாட்டான்.

நெருங்கி நண்பர்களிடம் கூட. தனக்கு அப்படி ஒன்றே இல்லை என்பது போல் நடிப்பான்.

நான் உமர் பாரூக் இரண்டு பேருமே அந்த பீரியட் ஆஃப் லேட்டென்ஸியை அப்போதுதான் கடந்து பகிரங்கமாக காமத்தை பேச ஆரம்பித்திருந்தோம்.

இருவருமே வயதுக்கு வந்து விட்டோம் என்பதை உறுதி செய்து கொண்டோம்.

ஒரு சொட்டு விந்து அறுபது சொட்டு ரத்தமா ? என்ற கேள்வி இருவருக்குமே இருந்தது.

உமர் கொஞ்சம் கட்டுபாடாக வளர்ந்தவன்.

நான் எப்போதுமே சுதந்திரத்தில் திளைப்பவன்.

அதனால் அவன் என்னை குருவாக ஏற்று கொண்டான்.

அவன் முழுவருட படிப்புக்கு கீழக்கரைக்கு தன் தாத்தா வீட்டுக்கு போகும் போது, தோட்டத்தில் மரம் ஏறி விளையாடியிருக்கிறான். மரம் உச்சியில் ஏறும் போது பெண்கள் குளிப்பதை முதன் முதலில் பொறுமையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த காட்சியின் எழுச்சியால் வயதிற்கு வந்து விட்டான்.

நான் பக்கத்து வீட்டு அண்ணன் தன் மெத்தைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த செக்ஸ் புத்தங்களை படித்து ஏற்பட்ட எழுச்சியால் வயதுக்கு வந்தேன்.

என்ன சொல்ல அந்த வயதின் உணர்ச்சிகளை.

எப்போதும் அது மட்டுமே தோண்றும்.

எல்லாப் பெண்கள் மீதும் தோண்றும்.

வயது வித்தியாசமில்லாமல், உறவு வித்தியாசமில்லாமல்,நாடு வித்தியாசமில்லாமல் தோண்றும்.

பஸ்ஸில் பெண்கள் ஏறும் போது மின்னல் வெட்டாய் தெரியும் கெண்டை கால் அழகை கூட பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது பார்க்க தோண்றும்.

ஒன்றே நினைப்பு. சயிண்ஸ் டீச்சரை பார்த்தாலும், கடைக்கு வரும் பெண்களை பார்த்தாலும்.

ஆனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இப்போது உமர் பாரூக் ஒரு ஆறுதல்.

அவனிடம் பேசும் போது உணர்வின் வீரியம் மட்டுபட்டாற் போல தோண்ற பேசினோம் . நிறைய பேசினோம்.

“மக்கா நான் செக்ஸ் புக்கே படிச்சதில்லடே”

”சூப்பரா இருக்கும் என்றேன்” நான்

“வாங்குவோமா. எனக்கு பயமாயிருக்கு “ என்றான் உமர்.

“காசு வைச்சிருக்கியா”

“தாள் இருக்கு.வாங்கத்தான் பயமா இருக்கு”

“நீ எதுக்குல பயப்படுத.வா போலாம்”

என்று அவனை அழைத்து அவரவர் சைக்கிளில் ஜெயகுமாரி ஸ்டேர்ஸ் இறக்கம் தாண்டி ஒரு கடை முன்னால் நின்றுதான் முதல் பத்தியில் படித்தீர்களே அந்த நிலமைக்கு வந்து நின்றோம்.

எனக்கும் பயம்தான்.

மறுபடி கேட்டேன்.

”இது என்ன புக்கு அண்ணே.”

”அது கல்கண்டு புக்கு பிள்ளோ”

திணறினேன். எப்படி கேட்பது. செக்ஸ் புக் வேண்டும் என்று எப்படி கேட்பது?

”இந்த புக்கு என்ன வெலன்னே.”

”இது இந்தியா டுடே எட்டு ரூபாய்.”

நான் முழிப்பதை பார்த்து கடைக்காரர்.

”தம்பிகளுக்கு என்ன புக்கு வேணும்”

நாங்கள் பேய் முழி, திருட்டு முழி, மலச்சிக்கல் முழி எல்லாம் கலந்து முழித்தோம்.

நான் ஆரம்பித்தேன்.

“இந்த கொஞ்சம் கிளாமரா இருக்கும்லாம்ணே, மேட்டர் புக் மாதிரி” என்று இழுத்தேன்.

கடைக்காரர் வாழ்க்கையில் பல கஸ்டத்தை பார்த்து, சமீபத்தில்தான் மதம் மாறி, நியாத்தீர்ப்பு நாளில் கர்த்தரின் நல்ல தீர்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நல்லவராய் ஆனவர் போல.

கத்த ஆரம்பித்தது எட்டூருக்கு கேட்டது.

“தம்பிகளா! இந்த ஸெக்ஸு புக்கு வியாபாரமெல்லாம் இந்த கடையில கிடையாது. அதுக்கு வேற கடைய பாரு பாத்துக்க. நான் கர்த்தருக்காக சாட்சி சொல்றவன் கேட்டியா”

பக்கத்து கடைக்காரர்களும், ரோட்டில் நடப்பவர்களும் எங்களையே பார்க்கிறார்கள்.

நாங்கள் போட்டிருந்த காக்கி பேண்டும் வெள்ளை சட்டையும் ஸ்கூல் படிக்கும் மாணவர்கள் என்பதை காட்ட, பக்கத்து டீ கடைக்காரர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

கடைக்காரர் கத்தியதோடு சும்மா நிற்க வில்லை. உமர் பாருக் கையை கெட்டியாக பிடித்து.

“உன் வீடு எதுல சொல்லு. நான் உன் அப்பா கிட்ட பேசுறேன். முளைக்கவே இல்ல அதுக்குள்ள செக்ஸ் புக்கு கேட்கிறயளோ”

அதுவரை பொறுமையா இருந்த நான் வெறியானேன்.

அந்த கடைக்காரர கையை உமரின் கையில் இருந்து வேகமாக தட்டி விட்டேன்.

“யண்ணே சும்மா மிரட்டாதீங்க. எங்க கடை செட்டிகுளத்துலதான் இருக்கு. அப்பா கடையிலதான் இப்ப இருப்பார். நான் இங்கணயே நிக்குதேன். போய் சொல்லும். கடை பேரு பாபு ஸ்டோர். போங்கண்ணே போ சொல்லுங்க. கடையில புக்கு இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க. மத்ததெல்லாம் வேண்டாம். நீ வால நாம வேற கடைக்கு போவோம்” என்று சொல்லி உமர் பாரூக்கை கூட்டி போனேன். சைக்கிளை மிதித்தோம்.

சைக்கிளில் வர வர கடைக்காரர் போய் அப்பாவிடம் சொல்லிவிட்டால் என்ற பயம் வந்தது.

அப்புறம் அப்பாதானே பேசிகிடலாம். அப்பாவும் இந்த வயச கிராஸ் பண்ணிதானே வந்திருப்பார்.

அப்பா கண்டிப்பா புரிந்து கொள்வார்.

அப்படி புரிஞ்சிகிலன்னா அவரையும் திட்டனும் என்று அடுத்த கடையை தேட ஆரம்பித்தோம்.

No comments:

Post a Comment