Friday 7 September 2012

காமெடி பீஸ் என்றால் அது நாம்தான்

இப்ப அதிகாரிகளும் அரசும் எலி நாய்கள் பிடிப்பதை பார்க்கும் போதும், 

பள்ளி பஸ்களை செக் செய்வதை பார்க்கும் போதும்,

குழந்தைகள் நீச்சல் குளத்தை சோதனை செய்யும் அக்கறையை பார்க்கும் போதும்,

இரண்டு வருடம் முன்னர் தெருவோரகடையில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இறந்து போன மாணவன் கொடுத்த எஃபெக்ட்டினால் அக்கறையோடு எல்லா பிரியாணி சட்டிகளையும் கவிழ்த்து தரையில் வீசி, தோசை மாவை தெருவில் கொட்டின அக்கறை மாதிரிதான் தெரியுது.

இப்ப எல்லாம் நல்ல உணவா விற்கிறார்கள் தெருவோர கடைகளில்? 

காமெடி பீஸ் என்றால் அது நாம்தான். 
நாம் என்றால் அது காமெடி பீஸ்தான்.

No comments:

Post a Comment