Friday 7 September 2012

மியாபூரில் எக்ஸிபிசன்

ஹைதிராபாத் மியாபூரில் சிறிய எக்ஸிபிசன் போட்டிருந்தான். 

ஹைதர் நகரில் இருந்து ஆட்டோ பிடித்து போனால், மீராவுக்கு ஒரே கொண்டாட்டம்.

உள்ளே போனதும் படம் போட்ட ரைம்ஸ் புக்கை எடுத்து வைத்து கொண்டாள்.

அப்புறம் வளையல், துணி, பொம்மைகள் என்று வாங்கினோம். 

அங்கே ஜெயண்ட் வீல், பிரேக் டான்ஸ் ரைட் மாதிரி பல விளையாட்டுகள் இருந்தன.

நான் இது மாதிரி விசயத்தில் ஆகச்சொங்கி.

சுத்தமா இண்டிரஸ்டே கிடையாது.

சிறிய, சுத்தும் ரயிலில் குழந்தைகள் ரைடு போகவே. இரண்டரை வயதுள்ள மீராவையும் ஏற்றினோம்.

ரயில் மூன்று ரவுண்ட் சுத்தியது. முதலில் உற்சாகமாய் வெளியே நின்றிருந்த, எனக்கும் மனைவிக்கும் கைகாட்டினாள்.

அப்புறம் போரடித்து விட்டது போலும். தன் கையிலிருந்த ரைம்ஸ் புக்கை சின்சியராக படிக்க ஆரம்பித்து விட்டாள்.

மிச்ச ஏழு ரவுண்டுகளிலும் புத்தகம்தான்.

சுத்தி இருந்து இதை பார்த்த ஜனங்கள்.” அய்யோ அந்த பிள்ளைய பாரு. இப்போ கூட புக்கு படிக்குது “ என்று தெலுகில் சொல்கிறார்கள்.

எனக்கோ பெருமை தாங்கவில்லை.

அந்த பெருமையை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் மீரா எக்செண்டிரிக்காக பிஹேவ் செய்துவிட்டாளோ என்ற பயமும் மனதில் இருக்கத்தான் செய்தது.

"அவளுக்கு பிடிச்சத அவ செய்றா" என்று நினைத்து வெளியே வந்தேன்.

No comments:

Post a Comment