Friday 7 September 2012

அச்சம் என்பது மடைமையடா...

அதாவது எனக்கு பாட்டு பாடுறது பத்தியெல்லாம் ரொம்ப தெரியாது. ஆனா லாஜிக் தெரியும்.

எங்க ஊர் கச்சேரியில் ஒருத்தர் பாடினார். 

என்ன பாட்டு பாடினார் என்றால் தமிழகத்திலே சேகுவாரா போல், லெனின் போல் பெரும் புரட்சியை ஏற்படுத்தின புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் ”அச்சம் என்பது மடமையடா. அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாட்டு.

அந்த பாடகர் புதிது பாருங்கள்.

ஃபிளீட் வைத்து மெரூன் கலர் பேண்ட் போட்டு, செங்கல் கலர் 
சட்டையும் போட்டு பாடினார்.

“அச்சம் என்பது மடைமையடா” முழு பலத்துடன் மேக்சிமம் கட்டையில் (?) பாடி விட்டார்.

அப்புறம் எங்கே “அஞ்சாமை திராவிடர் உடமையடாவை அதை விட அதிக ஸ்தாயில் பாட.

வேற வழியே இல்லாமல் இறக்கி பாடினார்.

ஹலோ புரியுதா?இல்லையா?

“அச்சம் எனபதை என்ன ஸ்தாயில் பாடுறோமோ ,அதை விட இரண்டு மடங்கு அதிக வாய்ஸ்ல “அஞ்சாமை திராவிடர் உடமையடா” பாடனும்.

முதல்லேயே புல் பலத்தோடு பாடினதால பாட்ட சொதப்பிட்டார்.

பக்கத்தில் இருந்த நாரோவில்( நாகர்கோவில்) பெரியவர்கள் எல்லாம் “ சோப்ளாங்கி பய. பாட்டால பாடுதான். செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்தாப்புலலா இருக்கான்”

பரிகாசம் செய்து வெத்தலை போட்டு மிச்ச சுண்ணாம்பை மறக்காமல் பக்கத்தில் இருந்த போஸ்ட் கம்பத்தில் தடவினர். :))

No comments:

Post a Comment