Friday 7 September 2012

மிஸ்டர் எக்ஸ் ஏணி வாங்கிய கதையும் நான் கற்பூரம் வாங்கிய கதையும்.

ஆனந்த விகடனில் ”மிஸ்டர் எக்ஸ்” 1980 கடைசிகளில் வரும். யாருக்காகவாவது ஞாபகம் இருக்கா. மிஸ்டர் எக்ஸ் என்பர் “சர்தார்ஜி” மாதிரி” மிஸ்டர் பீன்” மாதிரி ஒரு கற்பனை கதாப்பாத்திரம்.

ஒருநாள் மிஸ்டர் எக்ஸ் லண்டனுக்கு போவார்.

அவருக்கு சரியா ஆங்கிலம் தெரியாது.

அவசரமாக ஏணி வாங்க வேண்டும். 

ஏணியின் ஆங்கில பெயர் தெரியாது மிஸ்டர் எக்ஸுக்கு.

ஆனால் அதன் கட்டுபொருளான மூங்கிலின் ஆங்கில பெயர் “பேம்பு” என்று தெரியும்.

கடைக்கு போன அப்பாவியான மிஸ்டர் எக்ஸ்.

கடைக்காரரிடம் “பேம்பு பேம்பு என்று ஏணியின் நீண்ட மூங்கில்களை வெர்டிக்கலாகவும்,

அப்புறம் பேம்பு பேம்பு பேம்பு பேம்பு என்று சிறிய மூங்கில்களை ஹாரிசாண்டலாகவும் காற்றில் வரைந்து காட்டினாராம். :))

நான் ஹைதிராபாத்தில் முதன் முதலில் தமிழ் புத்தாண்டு கொண்டாட ”சூடகம்” வாங்க ஒரு கடையில் நின்று ‘சூடகம் உண்டா” என்றேன்.

தெலுகில் சூடகத்திற்கு என்ன பெயர் என்று தெரியாது.

அப்புறம் ஆங்கிலத்தில் “ கேம்பஹர்” உண்டா ? என்றேன்

அதுவும் கடைக்காரருக்கு புரியவில்லை.

அப்புறம் சாமிக்கு சூடகம் காட்டுவது போல கையை சுத்தி சுத்தி காற்றில் காட்டினேன்.

கடைக்காரர் “கற்பூரம்” அண்ணா என்று எடுத்து கொடுத்தார்.

அப்புறம்தான் தெரிந்தது கற்பூரம் என்ற பேரை மறந்து விட்டோமே என்று.

என்னுடைய காற்று பூஜை நடனத்தை நினைத்து வெட்கி வீடு வந்த்தேன்...

No comments:

Post a Comment