Friday 7 September 2012

அஞ்சு மருந்து தூள்

அக்கரா சித்தரத்தை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சுக்கு மிளகு திப்பிலி எல்லாத்தையும் காயவைத்து, நன்றாக அரைத்து பட்டுகண் அரிப்பிலோ நல்ல சுத்தமான வெள்ளை துணியிலோ அரித்து எடுத்தால் அதை நாங்க “அஞ்சு மருந்து தூள்” என்போம்.

ஜலதோசம், தொண்டை கரகரப்பு என்று வந்தால் தேனில் குழப்பி ஆள்காட்டி விரலால் வழித்து வழித்து நக்குவோம். 

தொண்டைக்கு இதமாகவும், உடம்புக்கு நல்லதாகவும் அமையும். 

இப்ப அந்த பழக்கம்
 ஏன் நின்னு போச்சுன்னு அம்மாவிடம் கேட்டேன். அம்மா ”ஆமா ஏன் நின்னு போச்சுன்னு தெரியல” என்று சொல்லி வருத்தபட்டார்.

அது மாதிரி தூதுவளை எல்லார் வீட்டிலும் நாகர்கோவிலில் இருக்கும்.

அதன் கசாயம் நல்ல ஆண்டிபயாட்டிக் மாதிரி கேட்கும் “கொர் கொர் இருமலுக்கு.

இப்போ அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

நான் டிரான்ஸ்போர்டில் வேலை பார்க்கும் போது பிரான்ஞ் மேனேஜர் என்னை தூதுவளை மிட்டாய் வாங்கிவர சொல்லி ஊரல்லாம் அலையவிட்டார்.

நான் எங்கள் வீட்டில் தூதுவளை செடியே இருக்கிறது எடுத்து கொடுக்கிறேன் என்றேன்.

அவர் தூதுவளை மிட்டாய்தான் தன் இருமலை போக்கும் என்றார்.( இது சும்மா பேராவ பெருசாக்குறதுக்கு).

இப்போ எனக்கு ரன்னிங் நோஸ் வந்தா உடன ‘சிட்ரசின்” போடுறேன்.

அப்புறம் மூணுவேளையும் குரோசின் போடுறேன்.

ஒரே நாளில் ஆண்டிபயாட்டிக் ஆரம்பித்து விடுகிறேன்.

மறக்காமல் ஆபிஸுக்கு லீவ் சொல்லி விடுகிறேன்.

No comments:

Post a Comment