Friday 7 September 2012

ஒடும் பஸ்ஸில் புத்தகம்...

பொதுவாக பஸ்ஸில் ஆட்டோவில் டிரைனில் போகும் போது புத்தகம் படிப்பது எனக்கு பிடிக்கும். 

ஆனால் கண் கெட்டு விடும் என்று எல்லோரும் பயமுறுத்துவார்கள். 

ஒரு விதமான குற்ற உணர்வோடே வாசிப்பேன்.

ஒருதடவை ( எத்தன ‘ஒரு’ போடுவப்பா) ஒரு காதலன் காதலி பஸ்ஸில் ஏறினார்கள்.காதலி பெண்கள் சீட்டில் அமர, காதலன் என்னருகே அமர்ந்தான். 

அன்றுதான் அவன் காதலி அவன் காதலை ஏற்று கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே உற்ச
ாகம்.

என்னை பார்த்து பஸ்ஸில் படிக்க வேண்டாம் என்றும் கண் இரண்டும் கரைந்து போய்விடும் என்றும் பெரிய அட்வைஸ்கள்.

அவன் வாய் நிறைய ‘ஹான்ஸ்’ இருந்தது.பற்கள் எல்லாம் கறை.அம்பது வயதில் கன்னங்களில் கண்டிப்பா அரிப்பு வரும்.

உள்ளுக்குள் கவுண்டமணி ஸ்டைலில் அவனை திட்டினாலும் வெளியே புத்தன் புன்முறுவலை பூத்த படி கேட்டேன்.

சரி சரி மேட்டருக்கு வரேன்.

கண் டாக்டரிடம் நேரில் போய் ஆலோசனை கேட்டேன்.

இதை கேட்பதற்காகவா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வந்திருக்கிறீர்கள் என்று ஆச்சர்யபட்டார்.

நான், எனக்கு சமரசம் இல்லாத உண்மை வேண்டும் என்று சொன்னேன்.

உங்களுக்கு ஆடும் எழுத்துக்களை படிக்கும் போது கண்வலி, தலைவலி ,வாமிட் ஃபீலிங் எதாவது வருகிறதா ? என்று கேட்டார்.

இல்லை என்றேன்.

அப்புறம் ஜெனரல் செக்அப் செய்தார்.

ஒரு பிரச்சனையும் இல்லை நீங்கள் தாராளாமாக ஒடும் பஸ்ஸில் படிக்கலாம் என்றார்.

கண்களை அதிகம் உபயோகிப்பதால் கண்கள் கெட்டு போகாது என்றும் சொன்னார்.

அன்று இரவு நிம்மதியாக தூங்கினேன்.

No comments:

Post a Comment