Monday 30 March 2015

சிரிப்பு வரும்

சிலவற்றை நினைத்தால் தன்னால் சிரிப்பு வரும் எனக்கு...
1.நெருக்கடியான பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்பியை பிடித்திருப்பார்கள்.
அந்தக் கம்பியை எல்லாம் மந்திர அழிப்பான்கள் கொண்டு அழித்து விட வேண்டும்.அப்படி அழித்தால் நெருக்கடி பஸ்சில் ஒவ்வொரு மனிதனும் கொடுக்கும் போஸை நினைத்தால் சிரிப்பு வரும்.
2.சிறுவயதில் என்னோடு படித்த ஜெரால்டு என்னும் நண்பன்” இந்திராகாந்தி வெள்ளை யானைக்கு தீனி போடுவதை போன்று மன்னர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியத்தை நிறுத்தினார்” என்று எழுதுவதற்கு பதிலாக,
சரியாகப் படிக்காமல் “இந்திராகாந்தி வெள்ளை யானைக்கு பாசமாக புல் கொடுத்தார்” என்பது மாதிரி எழுதியிருந்தான்.
அதை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
3.இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குழந்தைகளாயிருப்பார்கள் என்று வி.ஐ.பிகளைப் பற்றி நினைக்கும் போது சிரிப்பு வரும்.
அப்துல் கலாம் டிரவுசரோடு சுற்றியிருப்பார்,
ஐஸ்வர்யா ராய் மிட்டாய்க்காக அழுதிருப்பார்,
வால்டர் தேவாரம் “எம்மே எனக்கு ஊசிவேண்டாம்” என்று அவர் அம்மாவை நோக்கி ஒடிவந்திருப்பார் இப்படியெல்லாம் நயமாக ஒவ்வொரு வி.ஐ.பி பற்றியும் அவர்கள் குழந்தைகளாக கற்பனை செய்ய வேண்டும்.
அப்படி செய்யும் போது எனக்குச் சிரிப்பு வரும்.
4.கல்யாண விட்டில், எதாவது நல்லது கெட்டது நடக்கும் வீட்டில் சுறுசுறுப்பாக அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டு,மற்றவர்களிடம் நன்றாகப் பேசிக்கொண்டு நல்ல பண்பாளராக ஸீன் போடும் ஆட்களைப் பார்த்தால் சிரிப்பு வரும்.
5.நாளைக்கு சயின்ஸுக்கு ஒரு நோட்டு வாங்கிட்டு வாங்கடே என்று வாத்தியார் சொல்வார்.
வகுப்பில் ஸ்மார்டான பெயர் எடுக்க நினைக்கும் பையன் “சார் ரூல்ட் நோட்டா, அன்ரூல்ட் நோட்டா? என்று சும்மானாச்சும் கேட்பான்.
”குறிப்பெடுக்கனும்டே அவ்வளவுதான் எதாவது ஒரு நோட்ட வாங்கிட்டு வா.ஏன் இப்படி மொக்க கேள்விக் கேட்டு கழுத்தறுக்கிற” என்று வாத்தியார் கேட்பது மாதிரி ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்த்து சிரிப்பேன்.
6.ஒருமுறை நாகர்கோவில் சைமன் நகர் அருகே இருக்கும் போது, சைக்கிளில் வரும் போது யாருமில்லாத சாலையில் செல்லும் போது கறுப்பு நாயொன்று என்னைத் துரத்தியது.
நான் எப்பே என்று சைக்கிளை பதறி பக்கத்தில் இருந்த கொல்லாம்(முந்திரி) விளையில் விட்டு, நேரேப் போய் ஒரு மரத்தில் முட்டி கிழே விழுந்தேன்.
நான் விழுந்தது பார்த்து பயந்த நாய் ஒடிப்போயிற்று.
”நாயீ நாயீ நாய்ச்சனியன்” என்று என்னவெல்லாமோ வசனம் பேசி கொஞ்சம் அழுவது மாதிரி முகத்தை வைத்து சிணுங்கினேன்.
யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும் போது பக்கத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து இரண்டு மூன்று பெண்களும் ஆண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அந்தக் காமெடியை நினைத்தால் சிரிப்பு வரும்.
7.நன்றாக பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை திடீரென்று அடிக்க வேண்டும்.அவர் ஏன் அடிக்கிறாய் என்று கேட்பார் ? அப்போதும் அடிக்க வேண்டும்.
அவர் கோபத்தோடு ஏன் அடிக்கிறாய் என்று கேட்பார்.அப்போதும் அடிக்க வேண்டும்.அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.குறிப்பிட்ட சமயத்தில் வலிதாங்காமல் கேள்விக்கு விடையே வேண்டாம் என்று அவர் ஒடும் அளவுக்கு மட அடி அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடிவில் அவர் விட்டு விட்டு ஒடுவார் பாருங்கள்
ஏனென்று தெரியாது இப்படி கற்பனை செய்து பார்த்தால் எனக்கு சிரிப்பு அதிகமாய் வரும்.

1 comment:

  1. ஓ இப்படியெல்லாம் கூட சிரிக்கலாமா...

    ReplyDelete