Monday 30 March 2015

ஷாப்பிங் மால் லுங்கி...

”ஷாப்பிங் மால்களுக்கு லுங்கி கட்டிக் கொண்டு போவது எனக்குப் பிடிக்காது.அது ஒரு புறரீதியான அலப்பரை,அல்லது புறரீதியான வெளிப்பாடு.அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது”
என்பதான சிந்தனைகள், முழுமையாக சிந்திக்கப்படாத சிந்தனைகள் என்று சொல்வேன்.
ஷாப்பிங் மால்களுக்கு ஏன் ஐ.டி இளைஞர்கள் லுங்கிக் கட்டிக் கொண்டு போனார்கள்.
ஏன் என்றால் லுங்கி கட்டிக்கொண்டு போவது ஒரு அநாகரிகமான செயல் அல்ல என்று வலியுறுத்தத்தான்.
காயல்பட்டினத்தில் அல்லது கீழக்கரையில் அல்லது இடலாக்குடியில் இருந்து ஒருவர் ஷாப்பிங் மாலுக்கு லுங்கியோடு வந்தால்,
மால்களில் இருக்கும் லுங்கித்தடை கண்டு எவ்வளவு நொந்திருப்பார்.
அதை உலகத்தாருக்கு சுட்டவும்,அவர்கள் உரிமையையும் அது போன்ற பலரின் மீட்கவும் லுங்கி கட்டிக் கொண்டு போய் மால்களில் பிரவேசம் செய்தார்கள்.
அது வெறுமே அட்டன்சன் சீக்கிங் அல்ல.
அதுமாதிரிதான் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்துவதும்,
அது பற்றியெல்லாம் எழுதுவதும்,
அந்த உணவுக்கு பழகிக்கொள்வதும்.
இது தவறல்லடா இந்திய மானிடா ! இதுவும் ஒரு நல்ல தகுதியான ஏழைகளின் தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்லும் மனிதர்களின் உணவுடா என்று உரத்துக் கூறும் தன்மை அது.
ஆக புறரீதியான காண்பித்தல் என்பது,
புறரீதியான உணவு பழக்கம், உடைகளை வைத்தே மனிதர்களை அவமதிக்கும் செயலுக்கு காட்டும் எதிர்ப்பு என்று புரிந்து கொள்வதுதான் முழுமையான சிந்தனையாகும்.

No comments:

Post a Comment