Monday 30 March 2015

Too much smartness...

ஒரு கடையில் நின்று கொண்டே குழந்தைகளுக்கான கதையொன்றைப் படித்தேன்.படித்து முடிக்கும் போது க்ளுக் என்று சிரித்துவிட்டேன்.
Too much smartness என்கிற கருத்தைப் பற்றிய கதை அது. ஒருவேளை உங்களுக்கு க்ளுக் வரவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை. smile emoticon
ஒரு ஊரில் சாமியார் எப்போதும் மரத்தடியில் தவம் செய்து கொண்டே இருப்பார்.ஊர் மக்கள் அவரை நல்ல சாமியார் என்று சொல்லி ஏமாந்து கொண்டிருந்தார்கள்.
ஊரின் பண்ணையார் சாமியாரிடம் வந்து “ ஐயா! இந்த ஊரில் திருடர்கள் பயம் இருக்கிறது.அதனால் இந்தத் தங்கத்தை உங்களருகே பூமிக்குள் புதைத்து வைக்கிறேன்.நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.சாமியார்
“ஒ எஸ்” என்று தலையாட்டி வைத்தார் சாமியார்.
அடுத்த இரண்டு நாட்களில் தங்கத்தை அபேஸ் செய்து தன் துணிமுட்டைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினார்.
கிளம்பும் போது பன்ணையாரிடம் சொல்லாமல் விட்டு போகலாம்.அப்படியே சொல்லாமல் போனால் நம்மை சந்தேகப்படுவார் என்று , துறவிகள் அதிக நேரம் ஒரே இடத்தில் தங்கக்கூடாது என்று சொல்லி விடைபெறுவார்.
சாமியார் மேலுள்ள நம்பிக்கையில் அந்த புதைத்த தங்கக்காசுகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார் பண்ணையார்.
சாமியார் இரண்டு மைல்தூரம்தான் நடந்திருப்பார்.அவருக்கு யோசனையாக இருந்தது.
”ஒரு வேளை பண்ணையார் பிற்காலத்தில் தங்கம் இல்லாத போது,நம்மை சந்தேகப்பட்டுவிட்டால் என்ன் செய்ய? சாமியார் என்றால் நல்லவன் என்று அவரை நம்ப வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.
தீவிரமாக ஐடியா பண்ணுகிறார்.
ஐடியாவின் படி சாலையோரம் இருக்கும் குடிசையின் கூரையில் இருந்து ஒரு காய்ந்த(கூரை வேயப்பட்டிருக்கும் புல்) புல்லை எடுத்து தலையில் சொருகிக் கொள்வார்.நடக்கிறார்.
விடைபெற்ற கொஞ்ச நேரத்திலேயே சாமியார் திரும்ப வருவதைப் பார்த்த பண்ணையார் ப்தட்டமாக வருகிறார்.
“ஐயா சாமி என்னய்யா திரும்ப வந்துட்டீங்க”
“இல்லையப்பா நான் ஒரு சாமியார்.எனக்கு பொருள் ஆசை இருக்கவே கூடாது”
“நல்லதய்யா” இது பண்ணையார்.
“நான் உன்னிடம் விடைபெறும் போது கூரையில் இருக்கும் காய்ந்த புல் ஒன்று என் தலையில் சொருகிக்கொண்டது.அதையறியாமல் போய்விட்டேன்.இப்போதுதான் இதைப் பார்க்கிறேன்.அந்தப் புல்லை உன்னிடம் ஒப்படைக்கவே வந்தேன்” (ரொம்ப நல்லவராம்)
“போயும் போயும் புல்லைக் கொடுக்கவா வந்தீர்கள் சாமி”
“ஆம் மகனே எனக்கு பிறர் பொருள் மேல் ஆசை கிடையாது”
அதுவரை சாதரணமாக இருக்கும் பண்ணையாருக்கு “இந்த புல்லைத் திரும்பக் கொடுக்கும் சாமியார் புத்தி” ஒவர் ஸீனாகத் தெரிந்தது.
சாமியாரின் துணிமூட்டையை அவிழ்த்துப் பார்க்க அதில் சாமியார் திருடிய தங்கம் இருந்தது.சாமியார் மாட்டிக்கொண்டார். Too much smartness யினால் மாட்டிக்கொள்வது இதுதான்.
இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில் கமல்,திலீப்,எஸ்.வி.சேகர் மூவரும், ஸ்ரீதேவி ரூமுக்கு வெளியே காத்திருக்க,
உள்ளெ “போலிச்சாப்பாடு” சாப்பாடு உண்ணும் நாடகம் ஞாபகத்துக்கு வந்தது.
அதில் எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும்
எஸ்.வி.சேகர் இன்னும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஸ்பெசலாக சத்தமாக விக்கல் (ஏப்பமா விக்கலா ?) விடுவது போல நடிப்பார்.
அந்த விநோதமான குரலைக் கேட்டுதான் ஸ்ரீதேவிக்கு சந்தேகமே வரும்.
சாமியார் புல்லைத் திரும்ப ஒப்படைக்கும் கதை க்ளுக் கதையாகிவிட்டது

No comments:

Post a Comment