Monday 30 March 2015

அஜித் ரசிகை...

”என்னை அறிந்தால்” படம் பார்க்கும் போது ஒரு தீவிர அஜித் ரசிகையைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன்.
காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் (கேட்டுத் தெரிந்து கொண்டேன்) அவர் அம்மாவோடு வந்திருந்தார்.
குண்டா இருந்தாலும் அது பத்தி கவலப்படாம தன்னம்பிக்கையா இருக்கிறவங்களப் பார்க்க நல்ல ஃபீலிங் வருமே அதுமாதிரி இருந்தார்.
படம் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு க்ரீம் டூனட்டை பெரிய கடியாய் கடிக்க ஆரம்பித்தார்.அதில் ஒட்டியிருக்கும் சீனியை கையால் தட்டிவிட்டார்.அந்த சீனித்துகள்கள் அவர் மடியில் இருக்கும் சுரிதார் படுதாவில் படுகிறது.உடனே அதை தட்டி விடுகிறார்.இப்படி ஒவ்வொரு கடிக்கும் செய்து கொண்டே இருந்தார்.
படம் ஆரம்பித்தது.அஜித் வந்ததும் இரண்டு கைகளையும் கிரிக்கட் கேட்ச் பிடிப்பது மாதிரி உதட்டருகே வைத்துக் கொண்டு ஊ ஊ ஊ என்று ஊளையிட்டார்.எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். அந்த அதிர்ச்சி எனக்கே பிடிக்கவில்லை.ஏன் ஊளபோடக்கூடாதா என்ன? என்று தோன்றியது.
அடுத்து எப்போதெல்லாம் அஜித் ஹிரோயிஸம் செய்கிறாரோ அப்போதெல்லாம் ஊளை. ஒரு மணி நேரம் போன பிறகுதான் அமைதியானார்.
கிழக்கு வாசல் திரைப்படத்தில் ரேவதி கலகலவென சிரிக்கும் போது ஜனகராஜ் தோளில் துண்டோடு, “சிரி தாயீ நீ நல்லா சிரி தாயீ” என்று கண்கலங்க சொல்வாரே,
அது மாதிரி அந்தப் பெண்ணைப் பார்த்து ஒரு அண்ணன் ஃப்லீங்கில் “ ஊள போடு தாயீ... நீ நல்லா ஊள போடு.” என்று மனதுக்குள் டயலாக் பரவியது.
லேடீஸ் எது செய்தாலும் பிடிக்கிறது எனக்கு

No comments:

Post a Comment