Wednesday 12 December 2012

பெண்ணின் பிரச்சனை

பொதுவா பெண்களை அசால்ட் செய்வது போன்ற வார்த்தைகளை ஆண்கள் சர்வ சாதரணமாக உபயோகிக்கின்றனர்.

அந்த வார்த்தையை உள்ளார்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

நான் கூட அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.

பிற்பாடு ஆண்களால் அசால்ட் செய்யப்பட்ட பெண்களிடம் பேசின பிறகு என் மொத்த மனப்போக்க்கே மாறிவிட்டது.

-பத்தாம் வகுப்பு வரை வீட்டில் படிக்க வைப்பார்களா இல்லையா என்ற கஸ்டத்தில் உள்ள பெண், அதை
 முடித்து.ஐ.டி.ஐ யும் வீட்டில் கெஞ்சி கூத்தாடி படித்து. தன்னுடைய கம்மல் செயினை அடகு வைத்து ஆட்டோகேட் படித்து முடித்து , பத்து மைல் (கி.மீ அல்ல) பயணம் செய்து சிறு கம்பெனியில் வேலை பார்க்கிறார்

ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம்.

சின்ன கம்பெனி.ஏழு பேர்தான் வேலை பார்க்கிறார்கள்.

அவர் முதலாளி என்ன செய்வார் தெரியுமா?

பெண்ணின் கைகளை எடுத்து தன் கையில் வைத்து கொள்வாராம்.

வேறு எங்கும் தொட மாட்டாராம்.

கைகளை மட்டும் தான். எடுத்து தடவிக்கொண்டே இருப்பாராம்.

விரல்களை நீவுதல்.புறங்கையை தடவுவது என்று செய்து கொண்டே இருப்பாராம்.

அதை செய்யும் போது அவர் கண்களை பார்க்க கொதித்து விடுமாம் அந்த பெண்ணிற்கு.

ஒன்றும் செய்ய முடியாது.

வீட்டில் சொன்னால் வேலைக்கு போகாதே என்பார்கள்.

முதலாளி வீட்டிற்கு அனுப்பி விட்டால். வாழ்க்கை பயமுறுத்துகிறது.

அந்த பெண்ணின் வீடே ஒரு ரூம்தான்.

ரூமை மரித்து சிறிய சமையல்கூடம்.

ஒருத்தர் குசு விட்டால் எல்லோருக்கும் நாறும் அந்த சிறிய அறையில், எப்போதும் டிவி அலறி கொண்டே இருக்கும்.

பார்க்கிறார்களோ இல்லையோ டிவி அலறும்.

தம்பி எப்போதும் வீட்டு வாசலில் நண்பர்களுடம் “த்தா கொங்ம்மா “ என்று சத்தமாக பேசிக்கொண்டிருப்பான்.

அப்பாவுக்கு குடிப்பழக்கம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.ஆனால் வேலை செய்வதை கடந்த பத்து வருடங்களாக விட்டு விட்டார்.

மூன்று வீட்டிற்கு சேர்த்து ஒரே கக்கூஸ். ஒரே பாத்ரூம்.

காலையில் எப்போதும் கக்கூஸ் பிஸியாக இருப்பதாலும். அதன் அசுத்தத்தாலும் இந்த பெண் போவதே இல்லை.

கம்பெனியில் வந்து,கம்பெனி டாய்லெட்டில் யாரும் அடிக்கடி போகாத மதியம் சமயத்தில்தான் போவாராம்.

இதை கவனித்த முதலாளி ”நீ ஏன் மத்தியானம் பாத்ரூமுக்கு போனா லேட்டாகுது “ என்று கேட்பாராம்.எப்படி இருந்திருக்கும் அந்த பெண்ணிற்கு.

ஒன்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவள் நிலமை அப்படி.

தொண்ணூறுகளில் “டிசைனிங் கம்பெனியே “ மிகக்குறைவு.

எந்த பெரிய கம்பெனி போனாலும் எக்பீரியன்ஸ் கேட்பார்கள். அது அவருக்கு இல்லை.

இந்த கம்பெனியில் இரண்டு வருடமாவது வேலை செய்து விட்டால் அப்புறம் முன்னேறிவிடலாம்.

அதற்குதான் முதலாளியின் தொந்தரவு அதிகமாய் இருக்கிறதே. எப்படி வேலை பார்ப்பது என்று பல நாள் தூக்கத்தை தொலைத்தாள்.

வேலை பார்க்கும் சக பெண்களிடம் சொல்லவும் பயம். அவ்ர்கள் முதலாளிக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பார்களோ என்று .

அந்த பத்தொன்பதே ஆன .சிறுமி வயதை ஜஸ்ட் கிராஸ் செய்த பெண் யோசித்து கொண்டே இருக்கிறாள்.

சொல்லமுடியாத மன அழுத்தம் வருகிறது.

திடீரென்று இரவு முழித்தால் தூக்கமே வருவதில்லை.

இந்த இடத்தில் யோசித்து பாருங்கள்.

பத்தொன்பது வயதில் ஒரு ஆணுக்கு இந்த கவலை இருந்திருக்குமா?

அவனின் உலகத்தில் இது மாதிரியான பிரச்சனை வருமா?

கண் காது மூக்கு கை கால் குண்டி எல்லாம் ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும்.

இந்த பாழும் பாலுறுப்புகள்தான் இந்தியாவில் பெரிய பிரச்சனை.

1 comment:

  1. கண் காது மூக்கு கை கால் குண்டி எல்லாம் ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும்.

    இந்த பாழும் பாலுறுப்புகள்தான் இந்தியாவில் பெரிய பிரச்சனை.---- வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete