Wednesday 12 December 2012

துரியன் பழம்

துரியன் பழம் நம்ம எல்லோருக்கும் தெரிந்த பழம்.

அது குழந்தை வேண்டுபவர்கள் மருந்தாய் சாப்பிடுவார்கள் என்பதுதான் துரியனை பற்றி நாம் அறிந்தது.

அன்று பழக்கடையில் பார்த்தேன்.

ஒரு புட்பால் சைசில் முள் முள்ளாக பலாப்பழம் போல் இருந்தது.விசாரித்த போது ஒரு கிலோ எண்ணூறு ரூபாயாம். 

பழம் முழுவதும் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய் வரும் என்றார்.

துரியன் பழத்தின் வாசம் அல்லது நாற்றம்தான் உலகிலேயே அதிக அளவு வீச்சு உடையதாய் சொல்ல படுகிறது.

துரியன் ’டிராபிக்கல் பாரஸ்ட்’ எனப்படும் மழைக்காடுகளில் அதிகம் வளரும் தன்மையுடையதாம்.

மிருகங்களில் தற்போது உலகை ஆள்வது மனிதர்கள்.

பல கோடி வருடம் முன்னர் டைனோசர்கள் ஆண்டது.

அது போல தாவரங்களிலும் உண்டாம்.

ஜிம்னோஸ்பெர்ம்ஸ் எனப்படும் பூக்காமல் காய்க்கும் ( நம்ம சவுக்கு மரம் ஒரு ஜிம்னோஸ்பெர்ம்ங்க) தாவரம்தான் டைனோசர் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

அதில் இருந்து தோண்றியதே இப்போது உலகை ஆளும் தாவர வகையான ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ். அதாவது பூ பூத்து காய்க்கும் தாவரம் ( இதுக்கு உதாரணம் கேட்ட தலையிலே போடுவேன் டியர்ஸ்).

இந்த ஜிம்னோஸ்பெர்ம்ஸ்க்கும் ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ்க்கும் நடுவில் இருந்து இரண்டு தாவரவகைக்கும் பாலம் அமைத்து கொடுத்தது இந்த துரியன் மரவகைகள் தானாம்.

இதை எட்வர் கார்னர் என்னும் இங்கிலாந்து விஞ்ஞானி ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்றதுதான் உண்மை அப்படின்னு இல்லை.

அது ஒரு தியரி.

அந்த தியரி அடிப்படையில் துரியன் மரங்கள் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறதுதானே...

இத நான் படிச்சது எதுலன்னு கேட்கிறீங்களா?

கேளுங்க. அப்பதான ஸீன் போட முடியும்.

கிறிஸ்டோபர் லாயிட் எழுதிய 100 Species that changed the world.

அப்படிங்கிற புத்தகத்துல படிச்சேன்.

No comments:

Post a Comment