Monday 20 August 2012

மந்திரமா ? தந்திரமா ?

என் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புவரையான காலத்தில் பாஸ்டர் ஜான் பிரகாக்ஷ் எழுதிய இந்த புத்தகங்களை படித்தேன்.

- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் 

- மந்திரமா ? தந்திரமா ?

-பேயா ? நோயா ?

இவை எல்லாம் பிளாக் மாஜிக், பில்லி சூனியம், < ஏ.ஆர் ரஹ்மான் சொன்னாரே தன் வீட்டிருந்து கொத்து கொத்தாக கறுப்பு முடி எடுத்தனர் என்று.> மாதிரி காமெடிகளின் பின்னால் உள்ள தந்திரத்தை எடுத்து சொல்வது.


மனம் தான் எல்லாத்தையும் இயக்குவது. மத்தது எல்லாம் பொய் என்று அடித்து சொல்வது.

மாஸ் ஹிஸ்டீரியா என்ற வார்த்தையை முதன் முதலில் புரிந்து அதிசயித்தேன் இவர் மூலமாக.

அற்புதமான செம்பதிப்பாக வரவேண்டிய புத்தகங்கள்.

ஆனால் இப்போது கிடைப்பதில்லை.

அதுவரை பேய் என்றால் பயம்.
ஏனென்றால் எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சுடுகாடு நல்லா தெரியும். ( சத்தியமாங்க).

ஆனால் இவரின் இந்த புத்தகங்களை படித்த பிறகு தெளிவானேன்.

அப்புறம் முருகர் கூடவே பேசுவேன். அதாவது எனக்கும் முருகருக்கும் தொடர்ச்சியான விவாதம் நடக்கும் சிறுவயதில்.

அதுவும் மனநோய் என்று தெரிந்து நிறுத்தி விட்டேன்.

சில புத்தகங்கள் நம் சிந்தனை போக்கையே தெளிவாக்கிவிடும்.

நான் நாஸ்திகத்தை தேடி தேடி படித்து ரசிக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment