Wednesday 22 August 2012

கனகாம்பரம் பூவை இப்படியா தொடுப்பீர்கள் !

சிறுவயதில் ( எத்தனை பத்திதான் சிறுவயதில்ன்னு எழுதுவேனோ தெரியாது :) ) திருசெந்தூருக்கு போனால், மாலை வேளைகளில் தலையில் வைப்பதற்காக மல்லிகையும் கனகாம்பரமும் தொடுப்பார்கள் என் சித்திகள்.

அவர்களே தொடுத்து அவர்களே தலையில் வைத்தால்தான் அவர்களுக்கு திருப்தி. 

அதில் மல்லிகை பூவை ஒற்றையாக தொடுப்பார்கள்.

ஆனால் கனகாம்பரம் பூ இருக்கிறதே, அதை ஜோடி ஜோடியாகத்தான் தொடுப்பார்கள்.

கனகாம்பரத்தை ஜோடி ஜோடியாக எடுத்
து வைக்கும் வேலை எனக்கு மிகப்பிடித்தமான வேளை.

கனகாம்பரக்காம்பின் வளவளப்பு பிடிக்கும்.( ஆனால் பவள மல்லியே எனக்கு பிடித்தத்திலும் பிடித்தமான பூ என்பது தனிகதை).

அப்படி ஜோடி ஜோடியாக எடுத்து வைக்கும் போது, பூ முடிய போகும் போது ஒரு பரபரப்பு வரும்.

அது என்னவென்றால் எல்லா பூவுக்கும் ஜோடி இருக்கிறதா? இல்லை ஏதாவது பூ ஜோடி இல்லாமல் இருக்கிறதா என்கிற ஆர்வம்தான்.

அப்படி எல்லா பூவுக்கும் ஜோடி இருந்தால் சொல்ல முடியாத நிம்மதி வரும்.

அப்படி ஜோடி இல்லாமல் ஒரு பூ இருந்தால், அந்த தனி பூவை கசக்கி சுவடில்லாமல் எறிந்து விடுவேன்.

சினிமாவில் வாழாவெட்டி அக்காவோ, கால் இல்லாத தம்பியோ, தங்கையோ, வயதான சுருக்கம் விழுந்த அம்மாவோ கிளைமேக்ஸில் சாகடிக்கபட்டால் ஒரு இனம் தெரியாத திருப்தி வருமல்லவா?

அது போல ஒரு சைக்காலஜி போலும்.

ஜோடி இல்லாமல் இருப்பதற்கு மண்டையை போட்லாம் என்பது மாதிரியான நல்ல எண்ணம்.

சோடி மூக்கியம்ப்பா ! :))

1 comment: