Monday 20 August 2012

மணிபர்ஸும் அட்டகத்தி படமும்

ஏங்க எனக்கு அட்டகத்தி படம் பிடிச்சிருக்குங்க. 

பொதுவா மதுரை கிராமம், தஞ்சாவூர் கிராமம், திருநெல்வேலி கிராமம், கோயமுத்தூர் கிராமம் பத்தியே தமிழ் சினிமால எடுப்பாங்க.( அய்யனார் சிலையும், கள்ளி செடியும் கன்பர்ம் எண்டிட்டி )

இதுல சென்னை கிராமத்த அழகா சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

இயக்குனரின் நுண்ணுனர்வு பல ஸீன்ல தெரியுது. 

மொத்தமா படம் நல்லாவே இருக்கு என்னளவில். 
கிழக்கு வாசல்ல என்ன பேசிக்கிறாங்க ? 
படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா ?

அப்புறம் படம் பார்க்கும் போது. என் பகக்த்தில் அறுவயது அப்பா தன் மகளையும், மருமகளையும் படம் கூட்டி வந்ததால் அமர்ந்திருந்தார்.

அந்த ஸீட்டில் காத்து வரலன்னு, குடும்பம் மொத்தமும் பின்னாடி போனார்கள்.

படம் ரசித்தோம்.

தற்செயலாக பக்கத்து காலி ஸீட்டை பார்த்தால் அதில் ஒரு குண்டு பர்ஸ் கிடந்தது.

பின்னால் அந்த பெண்ணிடம் சொன்னேன்.

வயதானவர் அப்பெண்ணிடம் ஈவ் டீஸிங் பண்ணுவதாக நினைத்தாரோ என்னவோ தேவைக்கு அதிகமான முறைப்புடன் என்னிடம் மேட்டர் கேட்க, நான் சொல்ல, அந்த பெண் பரபரப்பா பர்ஸை எடுத்து கொண்டார்.

அப்புறம் வயதானவர் மொபைலில் டார்ச் அடிக்க பர்ஸ்ஸை சுத்தமாக சோதனை செய்கின்றனர்.

எனக்கோ பயமாய் இருக்கிறது.

தவறுதலாக எதாவது காணாமல் போனால் கூட என்னை திட்டுவார்களோ, அடிப்பார்களோ என்று பயம். ( அப்புறம் ஜனகராஜ் சொல்வது மாதிரி கவுண்டரே! உங்க மேல சத்தியமா நான் வண்டி மாடு கட்லீங்க” என்று சத்தியம் செய்ய வேண்டியது வரலாம்) .

அனால் என் தேவன் கிருபையினால் பர்ஸ் செக்கிங் சீக்கிரம் முடிந்து.

பிரச்சனை இல்லை.

ஆனால் நாந்தான் அந்த டென்சனில் “ ஆடி போனா ஆவணி “ பாட்டை சரியா பார்க்கவில்லை :))

No comments:

Post a Comment