Monday 30 March 2015

இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும்...

இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும் வேண்டும் என்று சொன்னால் அதன் அர்த்தம் முழுக்க முழுக்க ’சயின்ஸ் ஃபிக்சன்’ மாதிரி எழுதுவதல்ல.
அப்படி எழுதினால் தமிழின் தற்போதைய எழுத்தாளர்கள் அதை “வெறும் அறிவுஸீன்தான் இது படைப்பு என்பது வேறு.” என்ற விமர்சனத்தை வைக்கக்கூடும்.
நான் சொல்ல வருவது அறிவியலும் கணிதமும் நம் எழுத்தினூடே விரசி வரவேண்டும்.
உதாரணமாக ஜெயமோகன் ஒரு கட்டுரையில் Rubik's Cube ஐ ”இத்தனை கோடி” முறையில் ஒன்றாய் சேர்த்து புதிரை அவிழ்க்கலாம் என்பது போல அவருடைய நாவல் ஏதோ ஒன்றை ( பெயர் மறந்துவிட்டது) அத்தனை முறையாக அணுகலாம் என்றார்.
அதில் அந்த Rubik's Cube என்பதுதான் அறிவியல் மேட்டர்.அதனாலேயே அவருடைய சுயதம்பட்ட வாசகம் கூட ஒரு “அட” அந்தஸ்த்தை அடைந்துவிடுகிறது.
இந்தமாதிரிதான் இலக்கியத்தில் அறிவியலும் கணிதமும் இன்னும் விரவ வேண்டும் என்று சொல்கிறேன்.
தி.ஜானகிராமன் ”தொடர்ச்சியாக வரும்” விசயத்தை சொல்ல “ திரவுபதி புடவை மாதிரி” வந்தது என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
துகிலுரியப்படும் போது தொடர்ச்சியாக திரவுபதிக்கு புடவை கிடைத்தது போல எவ்வளவு பேசினாலும் அவருக்கு பேச விசயம் இருந்தது என்று ஜானகிராமன் சொல்லலாம்.
அதே ஜானகிராமன் காலத்தில் சொன்ன உவமைகளை இந்தகால இளைஞர்களும் சொன்னால் எப்படி?
அவர்கள் இப்படி சொல்லலாம் ”வகுக்க வகுக்க முடிவுறாத Irrational number போல அவள் சிந்தனை முடிவுறாமல் போய்க் கொண்டிருந்தது.”( உதாரணத்துக்கு சொல்கிறேன்).இப்படித்தான் அறிவியல் எழுத்தாக இருக்க முடியும்.
இலக்கியத்தில் துருத்திக்கொண்டு தெரியாமல் சரியான இடத்தில் அறிவியலைச் சொல்லி, அதன் மூலம் வாழ்க்கையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளும் உணர்வைக் கிளற வேண்டும்.
வருங்கால தமிழ் இலக்கியத்துக்கு ஒரு Freshness ஐ இம்முறை கொடுக்கும்.
இப்போது நிறைய படித்த விசயம் தெரிந்த மாணவர்கள் ஃபேஸ்புக் கொடுக்கும் தூண்டுதலால் எழுதும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.
ஆக அறிவியலும் கணிதமும் இலக்கியமும் இணையும் காலத்துக்கான சூழ்நிலை,
அதற்கான Climate அதிகமாகியிருக்கிறது.
உழைப்பையும், நேர் நோக்கையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையும் இதோடு கலந்தார்கள் என்றால் எழுத்துலகம் சுபிட்சம் பெரும்.

No comments:

Post a Comment