Saturday 2 August 2014

Sugar baby ...

Sugar baby என்பது பொருளாதார உதவியை எதிர்ப்பார்த்திருக்கும் பெண்ணைக் குறிக்கின்றது.ஆண் துணையில்லாமல் இருக்கும் பெண்கள் தங்களை மட்டுமோ, அல்லது தங்கள் குடும்ப மொத்தத்தையும் கவனித்துக் கொள்ள செக்ஸை விலையாக கொடுத்தால்,அவர்களை Sugar babies என்கிறோம் அப்படிப்பட்ட பெண்களுக்கு பொருளாதார உதவி அளித்து அவர்களிடம் செக்ஸை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் ஆணை Sugar daddy என்கிறோம்.

இதுமாதிரி செக்ஸை செக்ஸ் உணர்வின் தேவையில்லாமல் கொடுக்கும் வழக்கம் பழைய காலம் தொட்டே பெண்களுக்கு இருந்து வருகிறது.அதில் ஒரு முக்கியமான காரணம் பரிதாபப்பட்டு செக்ஸை கொடுப்பது.அல்லது தான் ஒரு வசதியைப் பெற செக்ஸைக் கொடுப்பது.

அமெரிக்காவில் 2000களில் பெண்களிடம் ஆய்வு செய்யும் போது இது பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

- ஆம்.என் நண்பன் புதிதாய் கார் வாங்கியிருந்தான்.அதை கொண்டாட என்னிடம் கேட்டான்.தொடர்ச்சியாக கெஞ்சினான்.பார்க்க பரிதாபமாக இருந்தது.அதனால் என்னைக் கொடுத்தேன்.

- நாங்கள்  வெப் சேட்டில் பழகி நெருக்கமானோம்.என் ஆன்லைன் காதலன் என்னைப் பார்க்க ஏழு மணி நேரம் காரை ஒட்டிக்கொண்டு களைப்பாக வந்திருந்தான்.நேரில் பார்க்க அவனை எனக்கு பிடிக்கவே இல்லை.ஆனாலும் என்னைத் தேடி இவ்வளவு தூரமிருந்து களைத்து எதிர்ப்பார்த்து வந்திருக்கிறான்.அவனை ஏமாற்றக்கூடாது இல்லையா? அதனால் என்னை அவனுக்கு கொடுத்து மகிழ்வித்தேன்.

சில சமயம் பெண்கள் தங்கள் உடலை அவர்களே ஒரு பண்டமாக நினைத்து விடுகிறார்கள்.”நான் ஒரு பண்டம் வைத்திருக்கிறேன்.அவன் அதை கேட்டு கேட்டு தொந்தரவு செய்கிறான்.என்னை எரிச்சலூட்டி தொந்தரவு செய்யவில்லை.கண்ணியமாக தொந்தரவு செய்கிறான்.ஆனால் தொடர்ச்சியாக செய்கிறான்.அவன் எனக்கு உதவியும் செய்கிறான்.உதவிக்கு பதிலாக என்னை தொந்தரவும் செய்வதில்லை.அவனுக்கு என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.நான் ஏன் என்னை அவனுக்கு கொடுக்கக் கூடாது? மகிழ்ச்சிப்படுத்தக்கூடாது.இந்த மனநிலையில் பல தொடர்புகள் ஏற்படுகின்றன.

பரிதாபப்பட்டு செக்ஸை கொடுப்பது.

திஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவலில்,வீட்டு வேலை செய்யும் கட்டுமஸ்தான பெண், அம்மணியிடம் சொல்வாள் “அம்மா நான் அங்கேயும் இங்கேயும் வேலை செய்யும் போது,அதைப் பார்த்து ஐயாவுக்கு உடம்பெல்லாம் நடுங்குது.தெரியாத்தனமா காபி கொடுக்கப்போனா உதறுது.நானே பரிதாபப்பட்டு என்ன அவருக்கு கொடுத்திருவேனோன்னு பயமாயிருக்கு” என்பாள்.

சிகரம் படத்தில் டெல்லி கணேஷ் கேரக்டர், ரம்யா கிருஸ்ணன் கேரக்டரிடம், தான் இத்தனை வருடம் பெண் சுகத்தையே அனுபவித்தது இல்லை என்று கெஞ்சும் போது, ஐயோ பாவம் என்று தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் பெண்ணை பார்க்கலாம்.

செவன் ஜி ரெயின் போ காலனி திரைப்படத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.அவன் தொடர்ச்சியாக அவளை வெறித்தனமாக தொடர்ந்து கொண்டிருக்கிறான்.வேறு எதுவுமே அவனுக்கு முக்கியமாக தெரியவில்லை.அந்த விடாப்படியான மனநிலை அவளுக்கு அவன் மேல் பரிதாபம் வந்து அவளைக் கொடுக்கும் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது.

கி.ராஜநாராயணனின் நாட்டுபுறக்கதையொன்றில்

ஒரு பெண்ணின் மீது,ஆணுக்கு காதல் அதிகம்.அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறான்.அவளுக்கோ திருமணமாகிவிட்டது.என்ன செய்வது.இருந்தாலும் அவள் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அவள் கணவன் வெளியூரில் இருக்கிறான்.இதைப் பயன்படுத்தி அந்தப் பெண் போகும் வழியில் ஒரு சிறுகடை போடுகிறான்.அந்தப் பெண்ணும் கடைக்கு வந்து சாமான்கள் வாங்குகிறாள் தினமும்.அவள் குடுக்கும் காசை விட அதிகமான பொருட்களை கொடுக்கிறான்.முதலில் அவளுக்கு அது புரியவில்லை.பின்பு சுதாரித்துக் கொண்டு காரணம் கேட்க,இவன் காரணத்தை சொல்கிறான்.அவள் அவனைத் திட்டி செல்கிறாள்.அதன் பிறகு அவன் கடையில் பொருள் எதையும் வாங்குவதில்லை.ஆனால் தினமும் அவன் கடையை கடந்தாக வேண்டிய நிலை.அவள் அப்படி கடக்கும் போதெல்லாம் இவன் கண்ணீர் விடுகிறான்.

வேறொன்றும் பேசுவதில்லை வெறும் கண்ணீர் மட்டும்தான்.இப்படியே ஒருரிரு மாதங்கள் போனது.கண்ணீர் நின்ற பாடில்லை.இந்தப் பெண்ணுக்கு பரிதாபம் வருகிறது.இவ்வளவு விருப்பமா நம் மேல் என்று நினைக்கிறாள்.அவன் கடையிலெயே மறுபடியும் சாமான் வாங்குகிறாள்.இவனோ சாமானை எடுத்துக் கொடுக்கும் போதெல்லாம் கண்ணீர் கசித்துக் கொண்டே கொடுக்கிறான்.இவளுக்கு ரொம்ப பரிதாபம் வந்து “ஏன்யா இப்படி அழுவுற” என்கிறாள்.இவன் அவளை சுட்டுகிறான்.அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவள் அவனிடம் “ பொழுதடைஞ்சா அப்படி என் வீட்டுப்பக்கம் வர வேண்டியதுதான.பேசிப்பழகிட்டு இருக்கலாம்ல” என்கிறாள்.

No comments:

Post a Comment