Saturday 2 August 2014

சிக்மெண்ட் ஃப்ராய்ட் பிடித்த முயலுக்கு மூணுகாலாம்...

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்லாத மனிதர்களே உலகத்தில் கிடையாது எனலாம்.

கொகெயின் போதைமருந்தை கண்டுபிடித்த போது அதை போதைமருந்தாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

கொகெயினை மார்ஃபின்,ஆல்கஹால் போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கும் மனிதர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களை போதை மருந்து பழக்கத்திலிருந்து மீட்டுவிடலாம் என்று அவர் நம்பினார்.

அவருடைய நண்பர்களுக்கெல்லாம் அதை பரிந்துரைத்தார்.கொகெயினை அஜீரணக் கோளாறுகள்,உடல் மெலிதல்,ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு என்று எல்லா வியாதிகளுக்கு மருந்தாக கொடுக்க முடியுமென்று அவர் நம்பினார்.அதையே மருத்துவ உலகில் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி வாதாடினார்.

ஆனால் கொகெயினைக் கொண்டு போதைப் பழக்கதை குறைக்க முடியாது.ஏனென்றால் கொகெயினே ஒரு மோசமான போதை மருந்துதான் என்று தெரியாமல் பிரச்சாரம் செய்த அவரே கொகெயினை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

பின் அதற்கு அடிமையுமானார்.

ஆனால் இந்த விஞ்ஞானியின் கொகெயின் பிரச்சாரத்தை அடியோடு மறுத்தார் “எர்லென்மேயர்” என்ற அவர் நண்பர்.”நோ உலகத்து மக்களே! அபின்,மது முதலான சாபக்கேடுகளுடன் கொகெயின் மனித இனத்தைக் கெடுக்க வந்த மூன்றாவது சாபக்கேடு” என்று காட்டமாக சொன்னார்.நிருபித்தார்.

ஆனால் அந்த ”அவர்” விஞ்ஞானி கம் டாக்டர் மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை.கடைசிவரை அவர் “கொகெயின் இஸ் குட் மெடிசின் யா” என்றே சொல்லி தன் வாழ்நாளில் சாதித்தார்.

அவர் பிடிச்ச முயலுக்கு மூணே காலாம்.

கடைசி வரியில் அந்த அவர் யார் என்று சொல்வதுதானே முறை.

அந்த அவர் என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த,மனோதத்துவம் பற்றி புரட்சிகரமான புதிய விசயங்களை ஆராய்ந்து உலகத்துக்கு சொன்ன “சிக்மெண்ட் ஃப்ராய்ட்” தான்... :) :) 

1 comment:

  1. அதே போல் எல்லா மன நோய்களுக்கும் காரணம் பாலியல் பிரச்சனைதான் என்பதாயும் பிடிவாதம் பிடித்தார்.

    ReplyDelete