Monday 7 March 2016

வார்த்தை விளையாட்டு.

கடனை திருப்பி கொடுக்காத குற்றத்துக்காக
ஆண்டனியோ உடலில் இருந்து சைலாக் ஒரு பவுண்டு சதையை வெட்டி எடுக்க போகும் போது
இளம் வக்கீல் குறுக்கே புகுந்து
"ஒப்பந்த படி சதையை மட்டும்தான் எடுக்க வேண்டும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் எடுக்கவேண்டும்"என்று சொல்லி சைலாக்கை திகைக்க வைக்கிறான்.
அன்று ஒரு கதை படித்தேன்.
ஒரு விடுதிக்கு சென்ற வழிப்போக்கன் விடுதியில் இருக்கும் பெண்ணிடம் பணத்தை கொடுத்து
"அம்மா பசிக்கிறது சீக்கிரம் சோறு போடுங்கள்.
ஒரு எலுமிச்சை அளவாவது சோறு போடுங்கள் என்று சொல்கிறான்.
அப்பெண்ணும் இலையில் ஒரு எலுமிச்சை அளவு சோறு போட்டு
"நீங்கள் சொன்ன அளவு சோறு போட்டு விட்டேன்" என்கிறாள்.
பிரச்னை மரியாதை ராமனிடம் வர அவர்
" சோறுக்கு காசு கொடுத்தவன் "எலுமிச்சை அளவு சோறு என்று தான் சொன்னான். எலுமிச்சை அளவு சோற்று உருண்டை என்று சொல்லவில்லை.
அதனால் அவனுக்கு எலுமிச்சை அளவுள்ள ஒற்றை சோற்று பருக்கையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
அப்படி கொடுக்க முடியாவிட்டால் அவன் கொடுத்த காசு மாதிரி பாத்து மடங்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்று சொன்னராம்.
"அவரை அவனா கொன்றான் அவன் கையில் உள்ள துப்பாக்கி தானே கொன்றது "என்றாராம் ஒருவர்.
இதை கேட்டு கடுப்பான இன்னொருவர் "துப்பாக்கி எங்கே கொன்றது தோட்டாதானே கொன்றது". என்றாராம்.
வார்த்தை விளையாட்டு.

No comments:

Post a Comment